தங்கம் விலை ரூ.112 குறைந்ததுதங்கம் விலை ரூ.112 குறைந்தது ... பென்ஷன் தொகை ரூ.1,000 ஆகிறது பென்ஷன் தொகை ரூ.1,000 ஆகிறது ...
24ம் தேதி பெட்ரோல் பங்க் "ஸ்டிரைக்': விற்பனையாளர் சங்கம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2013
12:46

சென்னை: 'கமிஷன் தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 24ம் தேதி, அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் மூடப்படும்' என, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்க பொதுச் செயலர், ஹைதர் அலி தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: தமிழகத்தில், 4,400 பெட்ரோல் பங்க் உட்பட, நாடு தழுவிய அளவில், 44 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. பெட்ரோல் பங்க் உரிமையாளர் கோரிக்கைகள் குறித்து ஆராய, பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் அடங்கிய, அபூர்வ சந்திரா கமிட்டியை, மத்திய அரசு அமைத்தது. இந்த கமிட்டி, 'விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, ஆறு மாதத்திற்கு ஒரு முறை, பெட்ரோல், டீசல் விற்பனை கமிஷன் தொகையை மாற்றி அமைத்தல், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் போது, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 0.09 பைசாவும், டீசலுக்கு, 0.08 பைசாவும் உயர்த்தி வழங்க வேண்டும்' போன்ற பரிந்துரைகளை, மத்திய அரசிடம் வழங்கியது. ஆனால், மத்திய அரசு, இந்த பரிந்துரைகளை, 2012, ஜன., முதல் அமல்படுத்தாமல் உள்ளது. எனவே, கோரிக்கைகளை வலியுறுத்தவும், அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கவும், நாடு தழுவிய அளவில், வரும், 22, 23ம் தேதிகளில், பெட்ரோல் பங்க்குகளில், மாலை, 6:00 மணி முதல் அதிகாலை, 6:00 மணி வரை, விளக்குகள் அணைத்து போராட்டம் நடத்தப்பட உள்ளது. 24ம் தேதி, பெட்ரோல் பங்க்குகளை மூடி, 'ஸ்டிரைக்' நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)