24ம் தேதி பெட்ரோல் பங்க் "ஸ்டிரைக்': விற்பனையாளர் சங்கம் அறிவிப்பு24ம் தேதி பெட்ரோல் பங்க் "ஸ்டிரைக்': விற்பனையாளர் சங்கம் அறிவிப்பு ... ரூ.15க்கு சி.எப்.எல்., பல்ப் விற்க மின் வாரியம் முடிவு ரூ.15க்கு சி.எப்.எல்., பல்ப் விற்க மின் வாரியம் முடிவு ...
பென்ஷன் தொகை ரூ.1,000 ஆகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2013
14:05

புதுடில்லி: தொழிலாளர் ஓய்வூதிய திட்டம், 1995ன் கீழ், மாதந்தோறும், குறைந்தபட்சம், 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இது குறித்து, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர், ஆஸ்கர் பெர்னாண்டஸ், லோக்சபாவில் நேற்று கூறியதாவது: தொழிலாளர் ஓய்வூதிய திட்டம், 95ஐ, தொழிலாளர் வருங்காலை வைப்பு நிதி அமைப்பு நிர்வகித்து வருகிறது. தொழிலாளர்கள், ஓய்வூதிய பங்களிப்பை அளிக்க தேவையில்லை. தொழிலாளர் ஒருவரின், அடிப்படை சம்பளம் மற்றம் அகவிலைப்படி சேர்ந்த தொகையில், 8.33 சதவீதத்தை, அவர் சார்ந்துள்ள நிறுவனம் அளிக்கிறது. இதில், 1.16 சதவீதம் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்கிறது. இதில் இருந்து, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, குறைந்த பட்ச ஓய்வூதியமாக, மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது நீண்ட நாட்களாக அரசின் பரிசீலனையில் உள்ளது. இது குறித்து, அரசு விரிவாக ஆலோசனை செய்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

இத்திட்டத்தை அமல்படுத்தினால், தொழிலாளரின் அடிப்படை சம்பளத்தில் இருந்து, 0.63 சதவீதம் தேவைப்படுகிறது. இவற்றை வழங்க, நிறுவனங்களின் பிரதிநிதிகளும், தொழிலாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை, அரசே ஏற்க வேண்டும் என, தொழிலாளர்கள் கூறிவருகின்றனர். இவ்வாறு, குறைந்தபட்ச ஓய்வூதியும், 1,000 ரூபாய் ஆக்கப்பட்டால், 35 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் அடைவர். வரவிருக்கும் லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, மத்திய அரசு அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)