பதிவு செய்த நாள்
20 டிச2013
00:47
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று மிகவும் மோசமாக இருந்தது. அமெரிக்க மத்திய வங்கி, ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை குறைக்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாதந்தோறும் சந்தையிலிருந்து கடன்பத்திரங்களை வாங்கும் அளவை, 8,500 கோடி டாலரிலிருந்து, 7,500 கோடி டாலராக குறைக்க அதிரடியாக முடிவெடுக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொள்ளும் முதலீடு வெகுவாக குறையும் என்ற நிலைப்பாட்டால், உள்நாட்டு பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. குறிப்பாக, வங்கி பங்குகளின் விலை, மிகவும் சரிவடைந்து போனது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 151.24 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 20,708.62 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 21,017.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,646.03 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், எல் அண்டு டி, கெயில், ரிலையன்ஸ் உள்ளிட்ட, 19 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், மாருதி, சன்பார்மா, விப்ரோ உள்ளிட்ட, 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 50.50 புள்ளிகள் சரிவடைந்து, 6,166.65 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,263.75 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,150.70 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|