பதிவு செய்த நாள்
20 டிச2013
00:49
புதுடில்லி: மத்திய அரசு, ஏற்றுமதிக்கான ஒரு டன் வெங்காயத்தின் விலையை, 800 டாலரில் இருந்து, 350 டாலராக குறைத்துள்ளது.கடந்த ஒரு சில வாரங்களாக, வெங்காயத்தின் விலை, குறைந்து வருகிறது.
குறிப்பாக, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், வெங்காயம் உற்பத்தி உயர்ந்து, சந்தைக்கு இதன் வரத்து அதிகரித்துள்ளது.இதனால், மொத்த விலை சந்தையில், ஒரு கிலோ வெங்காயம், 9 ரூபாய்க்கும் கீழ் சரிவடைந்தது. இதையடுத்து, விவசாயிகளும், வர்த்தகர்களும் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக, மத்திய அரசு, சென்ற திங்களன்று, ஏற்றுமதிக்கான ஒரு டன் வெங்காயத்தின் விலையை, 1,150 டாலரிலிருந்து, 800 டாலராக குறைத்தது.
விவசாயிகளின் நலன் கருதி, தற்போது ஒரு டன் வெங்காயத்தின் ஏற்றுமதி விலையை, 350 டாலராக மீண்டும் குறைத்து உள்ளது.இதனால், ஏற்றுமதி அதிகரித்து, வெங்காயத்தின் விலை நிலைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பாக, உள்நாட்டில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, 90–100 ரூபாய் வரை சென்றது.இதன் விலையை குறைக்கும் வகையில், கடந்த நவம்பர் மாதம், 1ம் தேதி, மத்திய அரசு, ஏற்றுமதிக்கான, ஒரு டன் வெங்காயத்தின் விலையை, 900 டாலரிலிருந்து, 1,150 டாலராக உயர்த்தியது.
இதன்படி, அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலைக்கும் குறைவாக, வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முடியாது. ஏற்றுமதி கட்டுப்பாடுகளால், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், வெங்காயம் ஏற்றுமதி, 8.53 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 18.22 லட்சம் டன்னாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|