பதிவு செய்த நாள்
20 டிச2013
10:31
மும்பை : இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் ஐந்தாம் நாளான இன்று(டிசம்பர் 20ம் தேதி) உயர்வுடன் துவங்கி இருக்கின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 117.10 புள்ளிகள் உயர்ந்து 20,825.72-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 25.65 புள்ளிகள் உயர்ந்து 6,192.30-ஆகவும் இருந்தது.
கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு வட்டியில்லா கடன்கள் வழங்குவதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து கரும்பு தொடர்பான பங்குகள் விலை நல்ல ஏற்றம் கண்டன. மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் விலை நல்ல ஏற்றம் கண்டதால் இந்த பங்குகளை முதலீட்டாளர் அதிகளவு வாங்க தொடங்கினர். மேலும் ஐடி மற்றும் வங்கி தொடர்பான பங்குகளையும் முதலீட்டாளர்கள் அதிகளவு வாங்க தொடங்கினர். இதனால் இந்திய பங்குசந்தைகளில் ஏற்றம் காணப்படுகின்றன.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஜப்பானின் நிக்கி 79 புள்ளிகள் சரிந்தும், ஹாங்காங்கின் ஹேங்சேங் 15.43 புள்ளிகள் உயர்ந்தும் காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|