வோடபோனின் பிரத்யேக "மியூசிக்' அப்ளிகேஷன்வோடபோனின் பிரத்யேக "மியூசிக்' அப்ளிகேஷன் ... 12 லட்சம் டேப்லெட் கம்ப்யூட்டர்கள் விற்பனை 12 லட்சம் டேப்லெட் கம்ப்யூட்டர்கள் விற்பனை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
குரல் கொடுத்தால் கார் வழிகாட்டும் - டேஷ்போர்டின் புதிய வடிவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2013
15:03

வாகனத் துறையில் நாள் தோறும், புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகமாகின்றன. அதில் ஒன்றுதான்,"டேஷ் போர்டு' பகுதியின் அதி நவீன வடிவம். ஓட்டுனருக்கு அதிகப்படியான குழப்பங்களை தவிர்க்க, "டேஷ்போர்ட்'ல் இருக்கும் நிறைய பட்டன்களை நீக்கிவிட்டு, தொடுதிரை வசதி செய்யப்பட்டுள்ளது.

கார் தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் புதிய தயாரிப்புகளில், இந்த தொடுதிரை வசதியை கொடுத்திருக்கின்றன. எனவே, கார் என்பது, ஒரு நகரும் கணினியாகவே மாறிவிட்டது என்று கூறலாம். அதில், நீங்கள் இணையத்தை பயன்படுத்தலாம். டிராபிக் நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம். அதற்கேற்ப ஓட்டுனர், பயணத்தை திட்டமிடலாம். உங்கள் மொபைல் போனையும், அதனுடன் இணைக்கலாம். உங்கள் காரை "பார்க்' செய்ய வசதியான இடத்தை தெரிந்து கொள்ளலாம். அருகில் இருக்கும், "ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்' போன்ற விவரங்களையும், உங்கள் காரில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் மொபைல் போன், காருடன் இணைத்திருக்கும்போதும், ஓட்டுனர் சாலையிலிருந்து கவனத்தை எடுக்காமலே குரல் மூலம், அவருக்கு தேவையான நபரை அழைக்கலாம். இந்த குரல் வழி கட்டளைகளை, மேலும், சில அமைப்புகளுக்கும் நீங்கள், பயன்படுத்த முடியும்.

உதாரணமாக, காரின், 'ஏசி'யை குறைக்க நினைக்கும்போது, அதற்கு, "ரிமோட்டையோ', "பட்டனையோ' தேட வேண்டியதில்லை. நீங்கள் கூறினால், உடனே, உங்கள் குரலை உணர்ந்து, தானாகவே, 'ஏசி' குறைந்துவிடும். மியூசிக் சிஸ்டத்தி"ல், இப்போதும், பாடும் பாடலை மாற்ற வேண்டும் என்றால், அதற்கும், குரலால் "கட்டளை' இட்டால் போதும்; உடனே, பாடும் பாடல் மாறிவிடும்.

காரில் பயணம் செய்யும் போது, தேவைக்கு ஏற்ப, "டேஷ்போர்டி'ன் தொடு திரையில், பயணத்திற்கு முன், நீங்கள் சில ஏற்பாடுகளை செய்யலாம். உதாரணமாக, உங்களது மியூசிக் சிஸ்டம் எவ்வளவு சத்தத்துடன் இருக்க வேண்டும்; "ஏசி' எவ்வளவு அளவில் இருக்க வேண்டும்; என்ன மேப் வரவேண்டும் என்று, எல்லாவற்றையும் "செட்' செய்து வைத்துவிட்டால், ஓட்டும்போது, ஒரே ஒருமுறை, "ஆன்' செய்தால் போதும். நீங்கள் செய்து வைத்த அத்தனை வசதிகளும், தானாகவே வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

வேறு ஒருவர் ஓட்டும்போது, அவருக்கு தேவையான அமைப்புகளை, அவர் பெயரில் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். ஒரு வீட்டில் ஐந்து பேர் உள்ளனர் என்றால், ஒவ்வொருவர் பெயரிலும், ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அதில் அவர்களின் தேவைகளை, வசதிகளை பதிவு செய்யலாம்.

காரில், "ஏசி' இருந்தாலே, அது வசதியான கார் என்பது மாறி, "புஷ் பேக் சீட்', டி.வி.டி., ப்ளேயர், எ.சி.டி.ஸ்கீர், என்று வளர்ந்து, இப்போது தொடுதிரை "டேஷ்போர்டு' வரை வந்து, இன்னும், ஓட்டுனரின் தேவைகளையும், வசதிகளையும் கணக்கில் கொண்டு, புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேடுதல் நடந்தபடியே இருக்கிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)