பதிவு செய்த நாள்
22 டிச2013
00:06
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 13ம் தேதியுடன் முடிவடைந்த காலத்தில், 19 கோடி டாலர் (1,140 கோடி ரூபாய்) சரிவடைந்து, 29,552 கோடி டாலராக (17.73 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி ?வளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 441 கோடி டாலர் (26,460 கோடி ரூபாய்) உயர்ந்து, 29,571 (17.74 லட்சம் கோடி ரூபாய்) டாலராக இருந்தது.ஆக, தொடர்ந்து ஐந்து வாரங்களாக வளர்ச்சி கண்டு வந்த நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, மதிப்பீட்டு வாரத்தில் சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கணக்கீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 19.11 கோடி டாலர் குறைந்து, 26,856 கோடி டாலராக சரிவை கண்டுள்ளது.
அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் மாற்றம் ஏதுமின்றி, 2,060 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.இருப்பினும், எஸ்.டீ.ஆர் மற்றும் சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு முறையே, 12 லட்சம் டாலர் மற்றும் 5 லட்சம் டாலர் குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|