பதிவு செய்த நாள்
22 டிச2013
00:16
புதுடில்லி:நாட்டின் நிகர நேரடி வரி வசூல், நடப்பு நிதியாண்டின் டிசம்பர் 20ம் தேதி வரையிலான காலத்தில், 13.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4.12 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த 2012-13ம் நிதியாண்டின் இதே காலத்தில், 3.63 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிகர நேரடி , வரி வசூலில், மூன்றாவது காலாண்டிற்கு (அக்., - டிச.,), நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி 8.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,02,626 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், நிறுவன வரி வசூல், 10.2 சதவீதம் உயர்ந்து, 2,60,752 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 2,36,580 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும், தனி நபர் வருமான வரி வசூலும், 20.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,22,818 கோடியிலிருந்து, 1,47,987 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இவை தவிர, கணக்கீட்டு காலத்தில், பங்கு பரிவர்த்தனை வரி வசூல், 3,427 கோடி ரூபாய் என்ற அளவிலும், செல்வ வரி வசூல், 752 கோடி ரூபாய் என்ற அளவிலும் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|