ஒரு சவரன் தங்கம் ரூ.64 உயர்வுஒரு சவரன் தங்கம் ரூ.64 உயர்வு ... ரபி பருவ பயிர் சாகுபடி பரப்பு 6 சதவீதம் அதிகரிப்பு ரபி பருவ பயிர் சாகுபடி பரப்பு 6 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஆம­ணக்கு உற்­பத்தி 11 லட்சம் டன்னாக குறைய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2013
00:21

சாத­க­மற்ற பருவ நிலை மற்றும் பயி­ரிடும் பரப்­ப­ளவு குறைந்­ததால், நடப்­பாண்டு, ஆம­ணக்கு உற்­பத்தி, 40 சத­வீதம் குறைந்து, 11 லட்சம் டன்­னாக சரிவு­அடையும் என, மதிப்­பி­டப்­பட்டுஉள்­ளது. இது, சென்ற ஆண்டு, 24 லட்சம் டன்­னாக இருந்­தது.
ஆந்­திரா:வழக்­க­மாக, செப்­டம்­பரில், ஆம­ணக்கு பயி­ரிடும் காலம் துவங்கி, 5 - 6 போக சாகு­படி நடை­பெறும். ஜன­வ­ரியில், முதல் அறு­வடை துவங்கும்.ஆம­ணக்கு உற்­பத்­தியில், குஜராத், ஆந்­திரா ஆகிய இரு மாநி­லங்கள் முன்­ன­ணியில் உள்ளன. இங்கு, நடவு காலத்தில், மழை பொழிவு குறை­வாக இருந்­ததால், ஆம­ணக்கு பயி­ரிடும் பரப்­ப­ளவு குறைந்­துள்­ளது.
இது குறித்து, குஜ­ராத்தைச் சேர்ந்த, சிவம் ஆயில் மில்ஸ் நிறு­வ­னத்தின் இயக்­குனர், மனோஜ் அகர்வால் கூறி­ய­தா­வது:விவ­சா­யிகள், வழக்­க­மாக பயிர் செய்யும் நிலத்தில் கூட, ஆம­ணக்கை பயி­ரி­ட­வில்லை. இதனால், அதன் பயி­ரிடும் பரப்ப­ளவு குறைந்­துள்­ளது. இதன் கார­ண­மாக, ஆம­ணக்கு உற்பத்தி சரி­வ­டையும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு அவர் தெரி­வித்தார்.நடப்­பாண்டு, மொத்த ஆமணக்கு உற்­பத்தி, 10 - 11 லட்சம் டன்­னாக இருக்கும். ஏற்கெ­னவே கையி­ருப்பில் உள்ள 3 லட்சம் டன்னை சேர்த்தால், மொத்தம் 14 லட்சம் டன் ஆம­ணக்கு கிடைக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டு உள்­ளது.
மருத்துவ பயன்பாடு:உள்­நாட்டில், ஆண்­டுக்கு, 18 - 19 லட்சம் டன் ஆம­ணக்கு தேவைப்­ப­டு­கி­றது.ஆம­ணக்கில் இருந்து மருத்துவ பயன்­பாட்­டிற்­கான விளக்­கெண்ணெய் தயா­ரிக்­கப்­படு­கி­றது.சர்­வ­தேச அளவில், விளக்­கெண்­ணெய்க்­கான தேவையில், 90 சத­வீ­தத்தை, இந்­தியா பூர்த்தி செய்து வரு­கி­றது. கடந்த 2012ம் ஆண்டு ஆம­ணக்கு உற்­பத்தி அதி­க­ரிப்பால், விவ­சா­யிகள், ஒரு குவிண்டால் ஆம­ணக்கை, 3,500 - 3,600 ரூபாய் என்ற அளவில், விற்­பனை செய்­தனர்.
ஏற்றுமதி விலை:இது, ஒரு டன் விளக்­கெண்­ணெயின் ஏற்­று­மதி விலையான, 1,200 - 1,250 டால­ருக்கு சமமாக, அதா­வது, 6,000 - 7,000 ரூபாய் என்ற அள­விற்கு இருந்­தி­ருக்க வேண்டும் என, மனோஜ் அகர்வால் மேலும் கூறினார்.கடந்த, 2011ம் ஆண்டு, ஆமணக்கு உற்­பத்தி, 24 லட்சம் டன்­னாக இருந்த போது, ஒரு டன் விளக்­கெண்ணெய் விலை, 2,600 - 2,800 டால­ராக இருந்தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
இது குறித்து, எண்ணெய் உற்­பத்­தி­யாளர் ஒருவர் கூறி­ய­தா­வது:இந்­திய ஆம­ணக்கு விவ­சா­யிகள், ஆத­ர­வற்று, ஏற்­று­ம­தியை சார்ந்தே உள்­ளனர் என்­பது, பன்னாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கும், வெளி­நாட்டு வர்த்­த­கர்­க­ளுக்கும் நன்கு தெரியும்.இதை, அவர்கள் தங்­க­ளுக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்டு, இந்­தி­யாவை சேர்ந்த, இரண்டு அல்­லது மூன்று நிறு­வனங்­க­ளுடன் ஆம­ணக்கு கொள்­முதல் தொடர்­பாக ஒப்­பந்தம் செய்து கொண்­டுஉள்­ளனர்.
கொள்முதல்:இந்த நிறு­வ­னங்கள், பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளுக்­காக, விவ­சா­யி­களிடம் இருந்து, மிகக் குறைந்த விலையில், ஆம­ணக்கை கொள்முதல் செய்­கின்­றன.ஆகவே, மத்­திய அரசு, ஆமணக்­கிற்­கான குறைந்­த­பட்ச ஆத­ரவு விலையை, இரு மடங்கு உயர்த்தி, டன்­னுக்கு, 6,000 - 7,000 ரூபா­யாக நிர்ண­யிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரி­வித்தார்.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)