பதிவு செய்த நாள்
22 டிச2013
00:48
மும்பை:அமெரிக்க மத்திய வங்கி, கடந்த 18ம் தேதி, வெளியிட்ட அறிக்கையில், வரும், 2014ம் ஆண்டு ஜனவரி முதல், அதன் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை படிப்படியாக குறைக்க உள்ளதாக, அதிகாரபூர்வமாக தெரிவித்தது.
வட்டி விகிதம்:இதன்படி, மாதந்தோறும் கடன்பத்திரங்கள் வாயிலாக திரட்டப்படும் தொகை, 8,500 கோடி டாலரில் இருந்து, 7,500 கோடி டாலராக குறையும்.இத்தகைய செயல்பாடுகள் மூலம், அமெரிக்க வங்கித் துறையில் வட்டி விகிதங்கள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் செய்துள்ள முதலீட்டை, அன்னிய நிதி நிறுவனங்கள் திரும்பப் பெறும் என, பங்குச் சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனால், இதற்கு நேர்மாறாக, அமெரிக்க மத்திய வங்கியின் அறிவிப்பு வெளியான மறுநாள் (19ம் தேதி), இந்திய பங்குச் சந்தையில், அன்னிய நிதி நிறுவனங்கள், 2,264 கோடி ரூபாய் மதிப்பிற்கு பங்குகளை வாங்கியுள்ளன. பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கண்ட புள்ளி விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி, கடந்த மே மாத துவக்கத்தில், அதன் பொருளாதார நடவடிக்கைகளை படிப்படியாக குறைக்கப் போவதாக அறிவித்தது.இதையடுத்து, மே - ஆக., வரையிலான காலத்தில், இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து, 370 கோடி டாலர் (22,200 கோடி ரூபாய்) மதிப்பிலான பங்குகளை அன்னிய நிதி நிறுவனங்கள் விற்பனை செய்துள்ளன.
மாற்றமில்லை:இது குறித்து பங்குச் சந்தை வல்லுனர் ஒருவர் கூறியதாவது:அன்னிய நிதி நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க அளவிலான பங்கு முதலீட்டை, ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே திரும்பப் பெற்றுவிட்டன.ஆகவே தான், அமெரிக்க மத்திய வங்கியின், அறிவிப்பிற்கு பின்னரும், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு மாற்றமில்லாமல் தொடர்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|