ஒரு சவரன் தங்கம் ரூ.64 உயர்வுஒரு சவரன் தங்கம் ரூ.64 உயர்வு ... வரத்து அதிகரிப்பால் மிளகு விலை சரிவு வரத்து அதிகரிப்பால் மிளகு விலை சரிவு ...
ரபி பருவ பயிர் சாகுபடி பரப்பு 6 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2013
00:15

புதுடில்லி:ரபி பருவ பயிர் சாகுபடி பரப்பளவு, டிசம்பர் 20ம் தேதி வரையிலுமான காலத்தில், 6 சதவீதம் அதிகரித்துள்ளது என, மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பருவ மழை:நாட்டின் பல மாநிலங்களில், பருவமழை நன்கு இருந்ததை அடுத்து, விவசாயிகள், கோதுமை, நெல், கொண்டைக் கடலை, கடுகு உள்ளிட்டவற்றின் சாகுபடியை அதிகளவில் மேற்கொண்டதையடுத்து, ரபி பருவ ஒட்டு மொத்த சாகுபடி பரப்பளவு சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.குறிப்பாக, மதிப்பீட்டு காலத்தில், கோதுமை பயிரிடும் பரப்பளவு, 273.97 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 253.20 லட்சம் ஹெக்டேராக இருந்தது.மத்திய பிரதேசம் (11.11 லட்சம் ஹெக்டேர்), உத்தரபிரதேசம் (5.24 லட்சம் ஹெக்டேர்) குஜராத் (3.63 லட்சம் ஹெக்டேர்) மற்றும் பீகார் (0.97 லட்சம் ஹெக்டேர்) உள்ளிட்ட மாநிலங் களில், கோதுமை பயிரிடும் பரப்பளவு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.
ராஜஸ்தான்:இதே நிலை தொடரும் பட்சத்தில், நடப்பாண்டில், கோதுமை பயிரிடும் பரப்பளவு, கடந்தாண்டு அளவை ( 298.3 லட்சம் ஹெக்டேர்) தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கோதுமை மட்டுமின்றி, கடுகு பயிரிடும் பரப்பளவும், 63.65 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 67.53 லட்சம் ஹெக்டேராக சிறப்பான அளவில் அதிகரித்து உள்ளது.குறிப்பாக, கணக்கீட்டு காலத்தில், ராஜஸ்தானில் கடுகு பயிரிடும் பரப்பளவு, 29.73 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துஉள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 27.32 லட்சம் ஹெக்டேராக மட்டுமே இருந்தது.
அதேசமயம், உத்தர பிரதேசத்தில், கடுகு பயிரிடும் பரப்பளவு, 10.49 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 10.37 லட்சம் ஹெக்டேராக சற்று குறைந்துள்ளது.ரபி பருவ முக்கிய பயிரான, கொண்டைக்கடலை பயிரிடும் பரப்பளவு, மதிப்பீட்டு காலத்தில், 86.92 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 83.05 லட்சம் ஹெக்டேராக குறைந்து காணப்பட்டது.உள்நாட்டில், நெல் பயிரிடும் பரப்பளவும், 1.74 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 2.14 லட்சம் ஹெக்டேராக வளர்ச்சி கண்டுள்ளது.
மகாராஷ்டிரா:மேலும், பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பளவும், 83.05 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 86.92 லட்சம் ஹெக்டேராக சிறப்பாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா (2.16 லட்சம் ஹெக்டேர்), மத்தியபிரதேசம் (2 லட்சம் ஹெக்டேர்) மற்றும் ராஜஸ்தான் (1.45 லட்சம் ஹெக்டேர்) உள்ளிட்ட மாநிலங்களில், விவசாயிகள் பருப்பு வகைகளை அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.இதே போன்று மக்காச் சோளம் பயிரிடும் பரப்பளவும், 9.59 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 11.11 லட்சம் ஹெக்டேராக வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக, பீகார் (1.17 லட்சம் ஹெக்டேர்), மகாராஷ்டிரா (71 ஆயிரம் ஹெக்டேர்) மற்றும் தமிழகம் (34,200 ஹெக்டேர்) ஆகிய மாநிலங்களில், இதன் பயிரிடும் பரப்பு சிறப்பாக உயர்ந்துள்ளது.
பல்வேறு தானியங்கள் பயிரிடும் பரப்பளவு உயர்ந்துள்ள நிலையில், கம்பு பயிரிடும் பரப்பளவு, 37.54 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 35.30 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்து உள்ளது. இதற்கு, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இதன் சாகுபடி பரப்பு குறைந்து போனதே முக்கிய காரணமாகும் என, வேளாண் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
சூரியகாந்தி:கம்பு மட்டுமின்றி, நிலக்கடலை பயிரிடும் பரப்பளவும், மதிப்பீட்டு காலத்தில், 3.67 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 3.44 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. மேலும், சூரியகாந்தி பயிரிடும் பரப்பளவும், 4.13 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 3.23 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)