தங்கம் விலையில் மாற்றம் இல்லைதங்கம் விலையில் மாற்றம் இல்லை ... மறை­முக வரி வசூல்ரூ. 3.08 லட்சம் கோடி மறை­முக வரி வசூல்ரூ. 3.08 லட்சம் கோடி ...
இயற்கை ரப்பர் மீதான இறக்­கு­மதி வரி குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2013
02:02

புது­டில்லி:மத்­திய அரசு, உள்­நாட்டு விவ­சா­யி­களின் நலன் கருதி, இறக்­கு­மதி செய்­யப்­படும் இயற்கை ரப்பர் மீதான சுங்க வரியை, 20 சத­வீதம் அல்­லது 1 கிலோ­வுக்கு, 30 ரூபாய் என்ற அளவில் உயர்த்­தி­யுள்­ளது. இதில், எது குறைவோ அதனை இறக்­கு­மதி வரி­யாக செலுத்­தலாம் என, மத்­திய நிதி அமைச்­ச­கத்தின் உய­ர­தி­காரி ஒருவர் தெரி­வித்தார்.அமலுக்கு வருகிறதுதற்­போது, இறக்­கு­மதி செய்­யப்­படும் ரப்பர் மீது, 20 சத­வீதம் அல்­லது கிலோ­வுக்கு, 20 ரூபாய் என்ற அளவில் வரி விதிக்­கப்­ப­டு­கி­றது.
இத­ன­டிப்­ப­டையில் இறக்­கு­மதி செய்­யப்­படும், ஒரு கிலோ ரப்­பரின் விலை, 160 ரூபாய் என்ற அளவில் வரு­கி­றது.வரும், வெள்ளிக்­கி­ழமை முதல் புதிய வரி விகிதம் அம­லுக்கு வரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.கேர­ளாவைச் சேர்ந்த பார்­லிமென்ட் உறுப்­பி­னர்கள், இறக்­கு­மதி செய்­யப்­படும் ரப்­பரால், உள்­நாட்டு விவ­சா­யிகள் கடு­மை­யாக பாதிக்­கப்­ப­டு­கின்­றனர் என்று தெரி­வித்­தனர்.உள்­நாட்டில் உற்­பத்தி குறைந்­துள்ள நிலையில், தற்­போது, ஒரு கிலோ ரப்­பரின் விலை, 158 ரூபாய் என்ற அளவில் உள்­ளது. இது, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 196 ரூபா­யாக இருந்­தது.உள்­நாட்டு விலையை விட, சர்­வ­தேச சந்­தையில் இயற்கை ரப்பர் விலை குறை­வாக உள்­ளதால், ரப்பர் அதி­க­ளவில் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கி­றது.சென்ற நவம்பர் மாதம் வரை­யி­லு­மாக, 2.38 லட்சம் டன் ரப்பர் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளது. நடப்பு முழு நிதி­யாண்டில், இதன் இறக்­கு­மதி, 3 லட்சம் டன்­னாக அதி­க­ரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.வரவேற்பு:கடந்த நிதி­யாண்டில் இயற்கை ரப்பர் இறக்­கு­மதி, 2.17 லட்சம் டன் என்ற அள­வில்தான் இருந்­தது.
மத்­திய அரசு, ரப்பர் மீதான இறக்­கு­மதி வரியை உயர்த்தி உள்­ள­தற்கு, கேர­ளாவில் பல்­வேறு அமைப்­புகள் வர­வேற்பு தெரி­வித்­துள்­ளன. இதனால், இயற்கை ரப்பர் உற்­பத்­தியில் ஈடு­பட்டு வரும், 11 லட்சம் விவ­சா­யி­க­ளுக்கு நிவா­ரணம் ஏற்­படும்.இருப்­பினும், மத்­திய அரசு, ரப்பர் மீதான இறக்­கு­மதி வரியை, 20 சத­வீதம் அல்­லது கிலோ­வுக்கு, 30 ரூபாய், இதில் எது, அதி­கமோ அதற்­கேற்ப வரி செலுத்த வேண்டும் என்று குறிப்­பிட்­டி­ருந்தால் அது, மேலும் பய­ன­ளிப்­ப­தாக இருக்கும் என, விவ­சா­யிகள் சங்­கத்­தினர் தெரி­வித்­துள்­ளனர்.டயர் தயாரிப்பு
நிறுவனங்கள்:இருப்­பினும், ரப்பர் மீதான இறக்­கு­மதி அதி­க­ரிப்பால், இந்­திய டயர் தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளுக்கு, எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டாது என, கூறப்­ப­டு­கி­றது. ஏனெனில், இந்­நி­று­வ­னங்களுக்கு, ஏற்­று­ம­தியின் அடிப்­ப­டையில், முன்­கூட்­டிய உரி­மத்தின் பேரில், இயற்கை ரப்­பரை எவ்­வித வரியும் இல்­லாமல் இறக்­கு­மதி செய்து கொள்ள அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)