பதிவு செய்த நாள்
24 டிச2013
02:02
புதுடில்லி:மத்திய அரசு, உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி, இறக்குமதி செய்யப்படும் இயற்கை ரப்பர் மீதான சுங்க வரியை, 20 சதவீதம் அல்லது 1 கிலோவுக்கு, 30 ரூபாய் என்ற அளவில் உயர்த்தியுள்ளது. இதில், எது குறைவோ அதனை இறக்குமதி வரியாக செலுத்தலாம் என, மத்திய நிதி அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அமலுக்கு வருகிறதுதற்போது, இறக்குமதி செய்யப்படும் ரப்பர் மீது, 20 சதவீதம் அல்லது கிலோவுக்கு, 20 ரூபாய் என்ற அளவில் வரி விதிக்கப்படுகிறது.
இதனடிப்படையில் இறக்குமதி செய்யப்படும், ஒரு கிலோ ரப்பரின் விலை, 160 ரூபாய் என்ற அளவில் வருகிறது.வரும், வெள்ளிக்கிழமை முதல் புதிய வரி விகிதம் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கேரளாவைச் சேர்ந்த பார்லிமென்ட் உறுப்பினர்கள், இறக்குமதி செய்யப்படும் ரப்பரால், உள்நாட்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்தனர்.உள்நாட்டில் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், தற்போது, ஒரு கிலோ ரப்பரின் விலை, 158 ரூபாய் என்ற அளவில் உள்ளது. இது, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 196 ரூபாயாக இருந்தது.உள்நாட்டு விலையை விட, சர்வதேச சந்தையில் இயற்கை ரப்பர் விலை குறைவாக உள்ளதால், ரப்பர் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.சென்ற நவம்பர் மாதம் வரையிலுமாக, 2.38 லட்சம் டன் ரப்பர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நடப்பு முழு நிதியாண்டில், இதன் இறக்குமதி, 3 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வரவேற்பு:கடந்த நிதியாண்டில் இயற்கை ரப்பர் இறக்குமதி, 2.17 லட்சம் டன் என்ற அளவில்தான் இருந்தது.
மத்திய அரசு, ரப்பர் மீதான இறக்குமதி வரியை உயர்த்தி உள்ளதற்கு, கேரளாவில் பல்வேறு அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இதனால், இயற்கை ரப்பர் உற்பத்தியில் ஈடுபட்டு வரும், 11 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் ஏற்படும்.இருப்பினும், மத்திய அரசு, ரப்பர் மீதான இறக்குமதி வரியை, 20 சதவீதம் அல்லது கிலோவுக்கு, 30 ரூபாய், இதில் எது, அதிகமோ அதற்கேற்ப வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தால் அது, மேலும் பயனளிப்பதாக இருக்கும் என, விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.டயர் தயாரிப்பு
நிறுவனங்கள்:இருப்பினும், ரப்பர் மீதான இறக்குமதி அதிகரிப்பால், இந்திய டயர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, எவ்வித பாதிப்பும் ஏற்படாது என, கூறப்படுகிறது. ஏனெனில், இந்நிறுவனங்களுக்கு, ஏற்றுமதியின் அடிப்படையில், முன்கூட்டிய உரிமத்தின் பேரில், இயற்கை ரப்பரை எவ்வித வரியும் இல்லாமல் இறக்குமதி செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|