பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி14.80 கோடி டன்னாக வளர்ச்சிபெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி14.80 கோடி டன்னாக வளர்ச்சி ... ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.16 ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.16 ...
கடன்பத்திர வெளியீடுகள் வாயிலாகஅயல்நாடுகளில் 900 கோடி டாலர் திரட்டல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2013
00:20

நடப்பாண்டு, இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் அன்னியச் செலாவணியிலான கடன்பத்திரங்களை வெளியிட்டு, 900 கோடி டாலர் திரட்டிக் கொண்டுள்ளன. இது, சென்ற, 2012ம் ஆண்டு திரட்டப்பட்ட, 412 கோடி டாலரை விட, இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய நிறுவனங்களின் மீது, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதையே, இது காட்டுகிறது என, வங்கியாளர் ஒருவர் தெரிவித்தார்.
தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், நடப்பாண்டு, வெளிநாடுகளில், 16 கடன் பத்திர வெளியீடுகளை மேற்கொண்டன. இது, சென்ற ஆண்டு, ஒன்பது என்ற அளவில் இருந்தது.நிறுவனங்கள் சார்பில், வெளிநாடுகளில் கடன் பத்திர வெளியீடுகளை மேற் கொண்டு, அதிக அளவில் அன்னியச் செலாவணியை (130 கோடி டாலர்) திரட்டிக் கொடுத்த வங்கிகளில், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்க் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் டச் பேங்க் உள்ளது. இவ்வங்கி, ஒன்பது கடன்பத்திர வெளியீடுகளை நிர்வகித்து, 129 கோடி டாலர் திரட்டிக் கொடுத்துள்ளது.
இந்த வரிசையில், ஜே.பி.மார்கன், ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து, சிட்டி பேங்க் ஆகியவை இடம்பெற்று உள்ளன.வரும் ஆண்டிலும், அதிக அளவில் அன்னியச் செலாவணியிலான கடன்பத்திர வெளியீடுகள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், வெளிநாட்டு கடன்பத்திரங்கள் மூலம், பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், 200 கோடி டாலர் அளவிற்கு நிதி திரட்டிக் கொள்ளும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)