கடன்பத்திர வெளியீடுகள் வாயிலாகஅயல்நாடுகளில் 900 கோடி டாலர் திரட்டல்கடன்பத்திர வெளியீடுகள் வாயிலாகஅயல்நாடுகளில் 900 கோடி டாலர் திரட்டல் ... ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.16 ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.16 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
9 ஆண்டுகளில் இல்லாத அளவு பங்கு விற்பனை : உள்நாட்டு நிதி நிறுவனங்கள் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2013
00:24

நடப்பு, 2013ம் ஆண்டு, டிசம்பர், 24ம் தேதி வரை, உள்நாட்டு நிதி நிறுவனங்கள், நிகர அளவில், 73,234 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன. கடந்த, 2004ம் ஆண்டுக்குப் பின், முதன் முறையாக, நடப்பாண்டு தான், உள்நாட்டு நிதி நிறுவனங்கள், இந்த அளவிற்கு நிகர அளவில், பங்குகளை விற்பனை செய்துள்ளன.
அன்னிய நிதி நிறுவனங்கள்:சென்ற, 2012ம் ஆண்டு, உள்நாட்டு நிதி நிறுவனங்கள், நிகர அளவில், 56,923 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன. இதையும் விஞ்சும் அளவில், நடப்பாண்டில், உள்நாட்டு நிதி நிறுவனங்கள், நிகர அளவில், பங்குகளை விற்பனை செய்துஉள்ளன.அதே சமயம், நடப்பாண்டு, அன்னிய நிதி நிறுவனங்கள், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிற்கு, பங்குகளை வாங்கியுள்ளன. இது, ஓராண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொண்ட, மூன்றாவது அதிகபட்ச பங்கு முதலீடாகும்.
இதுகுறித்து, பார்தி ஏ.எக்ஸ்.ஏ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி சந்தீப் நந்தா கூறியதாவது:பங்குச் சந்தை ஏற்றம் கண்டு வருகிறது. இந்த சாதகமான தருணத்தை பயன்படுத்திக் கொள்ளும் நோக்குடன், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை திரும்பப் பெற்று வருகின்றனர். இதன் காரணமாக, காப்பீடு, பரஸ்பர நிதி உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய நிதி நிறுவனங்கள், மொத்தமாக பங்குகளை விற்பனை செய்துள்ளன. மேலும் ரியல் எஸ்டேட், தங்கம் போன்ற பிற துறைகளின் ஈர்ப்பும், பங்கு முதலீடு வெளியேற காரணம்.
பணவீக்கம்:இந்த போட்டி துறைகளின் வருங்கால செயல்பாடு, பணவீக்கம் குறித்த எதிர்பார்ப்பு போன்றவை தான், எதிர்காலத்தில் நிதிச் சந்தையின் போக்கை தீர்மானிக்க கூடியதாக இருக்கும்.இவ்வாறுஅவர் தெரிவித்தார்.கடந்த நவம்பர்மாத இறுதி நிலவரப்படி, இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள், பங்கு சார்ந்த திட்டங்களின் கீழ், நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு, 1.76 லட்சம் கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.பங்குச் சந்தையின் ஏற்றத்தால், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து அதிகஅளவில் முதலீடுகள் திரும்ப பெறப்படுகின்றன.
ஊக்குவிப்பு நடவடிக்கை:இந்த வகையில்,மேற்கண்டதிட்டங்களில் இருந்து, நடப்பாண்டு, 11,283 கோடி ரூபாய் அளவிலான நிகர முதலீடு திரும்பப் பெறப்பட்டு உள்ளது. இது குறித்து, யு.டி.ஐ. அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பரஸ்பர நிதி திட்ட மேலாளர் லலித் நம்பியார் கூறியதாவது:வரும் ஆண்டு நடைபெற உள்ளபொதுத்தேர்தல், அமெரிக்க மத்திய வங்கி குறைக்கும் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கை குறித்த எதிர்பார்ப்பு, உள்ளிட்டவைதான், முதலீடுகளை தீர்மானிக்கும். இவற்றின் அடிப்படையில் தான், முதலீடுகள் குவிவதும், வெளியேறுவதும் இருக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
நீண்ட கால முதலீடு:கார்வி கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி ஸ்வப்னில் பவார் கூறியதாவது:முதலீட்டாளர்கள், தங்கள் முதலீடுகளை திரும்ப பெற விரும் பினால், உள்நாட்டு நிதி நிறுவனங்களுக்கு பங்குகளை விற்பனை செய்து விட்டு வெளியேறுவதை தவிர, வேறு வழியில்லை.ஏராளமான முதலீட்டாளர்கள், தங்களின் நீண்டகாலமுதலீடு, தற்போது அசலுக்கு பங்கம்வராமல் திரும்பியுள்ளதை காண்கின்றனர். அவர்கள் மேலும் காத்திருக்க மனமின்றி, உடனடியாக முதலீடுகளை திரும்பப் பெற்று வருகின்றனர்.இவ்வாறு, பவார் கூறினார்.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)