பதிவு செய்த நாள்
28 டிச2013
02:26
நடப்பு 2013ம் ஆண்டில், டிசம்பர் 18ம் தேதி வரையிலுமாக, உள்நாட்டில், ஒட்டு மொத்த அளவில், வங்கிகள் புதிதாக, 7,377 கிளைகளை துவங்கியுள்ளன.
அனுமதி : மத்திய அரசு, நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் வங்கி சேவைகள் கிடைக்க வேண்டும் என, அறிவுறுத்தி வருகிறது. இதன் அடிப்படையில், ரிசர்வ் வங்கி, ஒரு சில விதிமுறைகளுடன் முன் அனுமதியில்லாமல், புதிதாக கிளைகள் துவங்க, வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த வங்கிகள், பெரிய நகரங்கள் முதல், சிறிய நகரங்கள் வரை, நடப்பாண்டில், புதிதாக, 7,377 கிளைகளை துவங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.
கடந்த 2004ம் ஆண்டில், உள்நாட்டில் புதிதாக, 1,270 வங்கி கிளைகள் துவங்கப்பட்டன. இது படிப்படியாக அதிகரித்து, 2008ம் ஆண்டில், 5,047 ஆக உயர்ந்தது. இருப்பினும், 2009ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை, 4,910 ஆக சற்று குறைந்தது. அதன் பின், 2010ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை, 5,639 ஆகவும், 2011ல், 6,482 ஆகவும், கடந்த 2012ல், 7,079 ஆகவும் அதிகரித்தது.
பேங்க் ஆப் பரோடா : நடப்பு 2013ம் ஆண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கி அதிகபட்சமாக, 723 புதிய கிளைகளை துவங்கியுள்ளது. இதையடுத்து, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 627 கிளைகளையும், பேங்க் ஆப் பரோடா, 367 கிளைகளையும் துவங்கியுள்ளன.
தனியார் துறையில், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், 587 கிளைகளையும், ஆக்சிஸ் பேங்க், 474 கிளைகளையும், எச்.டீ.எப்.சி. பேங்க், 339 கிளைகளையும் புதிதாக துவக்கியுள்ளன என, ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், பல வங்கிகள், கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் கிளைகளைத் துவக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பதிவு அலுவலகத்தை கொண்டு செயல் பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், நடப்பாண்டில் இதுவரையிலுமாக, புதிதாக, 324 கிளைகளைத் துவக்கியுள்ளது.இதில், 215 கிளைகள் கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் துவங்கப்பட்டுள்ளன என, இவ்வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம். நரேந்திரா தெரிவித்துள்ளார்.
கிராமங்கள் : மத்திய அரசு, நாட்டில் வங்கி சேவை இல்லாத, 6.25 லட்சம் கிராமங்களுக்கு வங்கி சேவை வழங்கப்பட வேண்டும் என, திட்டம் வகுத்தது.இதன் பேரில்தான், வங்கிகள், அதிக எண்ணிக்கையில், கிளைகளை துவக்கி வருகின்றன. இருப்பினும், மூன்று லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில், இன்னும் வங்கி சேவை கிடைக்காத நிலை உள்ளது.
அடுத்த இரண்டரை ஆண்டு களுக்குள், நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புறங்களிலும் வங்கி வசதி கிடைக்கும்வகையில்,நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, வங்கியாளர்கள் தெரிவித்தனர்.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|