தங்கம் விலை ரூ.32 குறைந்ததுதங்கம் விலை ரூ.32 குறைந்தது ... உருக்கு உருண்டை ஏற்றுமதி11 மடங்கு வளர்ச்சி உருக்கு உருண்டை ஏற்றுமதி11 மடங்கு வளர்ச்சி ...
கடுமையான பனிப்பொழிவால்குண்டு மல்லி உற்பத்தி பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2013
02:29

சென்னை: கடுமையான பனிப்பொழிவு காரணமாக, தமிழகத்தில், குண்டு மல்லி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில், நூற்றுக்கணக்கான விவசாயிகள், குண்டு மல்லி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதிகளில், 700 ஹெக்டேர் பரப்பளவில், குண்டு மல்லி சாகுபடி நடைபெறுகிறது. நடப்பு டிசம்பர் மாதத்தில், கடுமையான பனிப்பொழிவால், குண்டுமல்லி உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, மலைப்பகுதிகளில், உறைபனி காரணமாக, குண்டு மல்லி, மொட்டாக இருக்கும் போதே கருகி விடுகிறது.
இதனால், தாண்டம்பாளையம், புதுகொய்னூர், கொத்தமங்கலம், வடவல்லி, கெஞ்சனூர், சிக்கரசம்பாளையம் பகுதிகளில், குண்டு மல்லி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்துள்ளனர்.
குண்டு மல்லி உற்பத்தி குறைவால், சத்தியமங்கலம் சந்தையில், அதன் வரத்து, 30 டன்னில் இருந்து, 1 – 2 டன் என்ற அளவில், வீழ்ச்சி கண்டுள்ளது.அதே சமயம், சந்தைக்கு வரும் சிறிய அளவிலான குண்டு மல்லியின் தரம் நன்கு உள்ளதால், அதன் விலை, அதிக வேறுபாடின்றி, கிலோ, 300 ரூபாயாக உள்ளது என, வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
குண்டு மல்லிக்கு புகழ் பெற்ற சத்தியமங்கலம் சந்தைக்கு, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருவர்.அதுபோன்று, கர்நாடகா மாநிலத்தின், பெங்களூரு, மைசூர், சாம்ராஜ்நகர் ஆகியபகுதிகளை சேர்ந்த வியாபாரிகளும், சத்தியமங்கலம் சந்தையில், குண்டு மல்லி வாங்க வருவது வழக்கம்.
தற்போது, குண்டு மல்லி வரத்து குறைந்துள்ளதால், அவற்றை கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.வரும்,2014 பிப்ரவரி வரை, குண்டு மல்லி உற்பத்தியும், வரத்தும் குறைவாகவே இருக்கும் என,சந்தையாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)