பதிவு செய்த நாள்
28 டிச2013
17:37
இசுசூ மோட்டார் இந்தியா நிறுவனம் முதன் முதலாக பிஎஸ்4 தர ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வாகனமான எம்யு-7யை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில், டீசல் இன்ஜின் தயாரிப்பில் பெயர் பெற்ற இந்நிறுவனம், எம்யு-7 எஸ்யுவியில், தங்கள் இன்ஜின் நிபுணத்துவத் திறனை வெளிப்படுத்தியுள்ளது.
உயர்வான எரிபொருள் சிக்கனம் மற்றும் சிறப்பான செயல் திறனை கொண்டுள்ளது எம்யு-7. ஏழு இலக்கை கொண்ட இந்த எஸ்யுவி பிரீமியம் வாகனமாக சொகுசான உட்புறத்தை வழங்குகிறது. இந்திய எஸ்யுவி வாகனங்களிலேயே மிக அதிக நீளமாக, 3 மீட்டர் நீளமுள்ள வீல்பேஸ் கொண்டுள்ளது எம்யு-7.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் வாகனத்தின் அறிமுகத்தோடு, தனது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு 'இசுசூ இன்சைட்' என்ற பெயரில் தனித்துவமான சேவை செயல் திட்டத்தையும் இசுசூ அறிமுகப்படுத்தியுள்ளது. இசுசூவின் எம்யு-7 எஸ்யுவியில் பிஎஸ்4 டீசல் இன்டர்கூல்ட் விஜிஎஸ் டர்போ டீசல் இன்ஜின் 2999 சிசி திறனுடன், 163 பிஎஸ் பவரையும், 360 என்எம் டார்க்கை 1800-2800 ஆர்பிஎம்மில் வழங்கக் கூடியதாகவும் உள்ளது. இதன் டிரான்ஸ்மிஷன் 6 ஸ்பீட் மானுவல் கியர் பாக்ஸ் கொண்டுள்ளது.
நல்ல நீளமான கம்பீரமான உறுதியான கட்டமைப்பை கொண்டுள்ள, எம்யு-7 எந்த மாதிரியான சாலையானாலும் இயல்பாக செல்லும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலைகளில் ஸ்திரத்தன்மையை வழங்குவதுடன், 3 சேன்களும், 4 சென்சார்களும் கொண்ட ஏபிஎஸ், இபிடியுடனான பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பான பாதுகாப்பை வழங்குகிறது. டியூவல் ஏர்பேக் மற்றும் புரொஜெக்டர் பைட் ஹேலோஜென் லைட் பயணத்தின் பாதுகாப்பை அதிகரிக்கிறது.
வரும், 2015-16 இறுதிக்குள், 60 விற்பனையகங்களை தொடங்கி, தேசிய வீச்செல்லையை அதிகரிக்கத் திட்டம் கொண்டுள்ளது இசுசூ. வடசென்னையில் தொழிற்சாலைகள் மற்றும் ஐ.டி., நிறுவனங்கள் பரவலாக அமைந்திருக்கும் புறநகர் பகுதியான அம்பத்தூரில் இசுசூ ஷோரூம் திறக்கப்படவுள்ளது. இந்திய எஸ்யுவி சந்தையில், மற்றொரு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, எம்யு-7 மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று, இசுசூ நிறுவனம் எதிர்பார்க்கிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|