தங்கம் விலை ரூ.88 குறைந்ததுதங்கம் விலை ரூ.88 குறைந்தது ... தமிழகத்தில் பேப்பர் விலை கிடு கிடு : டன்னுக்கு ரூ.20 ஆயிரம் உயர்வு தமிழகத்தில் பேப்பர் விலை கிடு கிடு : டன்னுக்கு ரூ.20 ஆயிரம் உயர்வு ...
சேவை வரிக்கு சலுகை காலம் : நாளை முடிகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2013
14:44

புதுடில்லி: சேவை வரி செலுத்தாதவர்கள், எவ்வித அபராதமும் இன்றி, நிலுவையில் உள்ள பாக்கிகளை செலுத்துவதற்கு அளிக்கப்பட்ட சலுகை காலம், நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து, ஏராளமான விண்ணப்பங்கள், இன்றும், நாளையும் குவியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட்டில் அறிவிப்பு : சேவை வரியை, வாடிக்கையாளர்களிடம் வசூலித்த நிறுவனங்கள், அவற்றை முறைப்படி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளன. இதையடுத்து, சேவை வரி செலுத்தாதவர்கள், பழைய பாக்கி முழுவதையும், தாமத கட்டணம், அபராத கட்டணமின்றி, செலுத்தும் வகையில், இந்தாண்டு பட்ஜெட் தாக்கலின் போது, நிதி அமைச்சர் சிதம்பரம், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதன் படி, 2007 அக்டோபர், 1ம் தேதி முதல், 2012 டிசம்பர், 31ம் தேதி வரை, நிலுவை வைத்துள்ள சேவை வரி மற்றும் கூடுதல் வரி உட்பட அனைத்தையும் முறைப்படி அறிவித்து, அவற்றை, டிசம்பர், 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இப்படி செய்தால், தாமதம் மற்றும் அபராத வட்டி செலுத்த வேண்டியது இல்லை என, சலுகை அளிக்கப்பட்டு இருந்தது.

பொது மன்னிப்பு அளிக்கும் காலமாக கருதப்பட்ட இது, கடந்த மே, 10ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதுவரை, 21 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், 3,762 கோடி ரூபாய் வரை செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சலுகை காலம், நாளையுடன் முடிவடைவதால், இன்றும், நாளையும் அதிகளவில் விண்ணப்பங்கள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், இதுபற்றி, கருத்து தெரிவித்த நிதி அமைச்சர், சிதம்பரம் கூறுகையில், சேவை வரி செலுத்துவோராக, 17 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால், 7 லட்சம் பேர் மட்டுமே கணக்கு தாக்கல் செய்துள்ளனர். மீண்டும் சலுகை காலம், அடுத்த 20 ஆண்டுகளுக்கு கிடையாது, என, குறிப்பிட்டு இருந்தார்.

வாரன்ட் இன்றி கைது: சேவை வரி, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள் ளவர்கள் மீது, வாரன்ட் பிறப்பிக்காமல், கைது நடவடிக்கை எடுக்க முடியும் என, சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. எனவே, இந்த சலுகை காலத்தை பயன்படுத்தி, அதிகமானோர் வரி செலுத்த முன்வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியாண்டில், மறைமுக வரி வசூல் மூலம், 5.65 லட்சம் கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)