பதிவு செய்த நாள்
30 டிச2013
14:46
கீழக்கரை: மீன் வரத்து குறைவால், ராமநாதபுரம் மாவட்ட--ம் கீழக்கரை சந்தையில், விலை உயர்ந்துள்ளது. கீழக்கரை, பெரியபட்டினம், முத்துப்பேட்டை, மாயாகுளம், களிமண்குண்டு, ஏர்வாடி பகுதிகளில், மீன்பிடி நடகிறது. சில நாட்களாக, வரத்து குறைவால், வியாபாரிகளிடையே ஏலம் எடுப்பதில், கடும் போட்டி நிலவுகிறது. இதனால், சாதாரண மீன் கூட விலை அதிகரித்துள்ளது.
மீன் மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் நேவிஸ் கூறுகையில், கடலில் மழை இல்லாததால் மீன்வளம் குறைந்துள்ளது. சிறிய வகை மீன்களே அதிகம் கிடைக்கிறது. சில நாட்களாக மீனவர்கள், போதிய மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர், என்றார்.
விலை, கிலோவில்: கடந்த வாரம் 600க்கு விற்ற சீலா மீன் 700; 120 க்கு விற்ற வில மீன், 140;, 180க்கு விற்ற வால மீன், 220; 160க்கு விற்ற ஊளா 200; 220க்கு விற்ற நண்டு, 280; 120க்கு விற்ற திருக்கை, 160; 30க்கு விற்ற சூடை, 50 ரூபாய்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|