சேவை வரிக்கு சலுகை காலம் : நாளை முடிகிறதுசேவை வரிக்கு சலுகை காலம் : நாளை முடிகிறது ... தமிழகத்தில் முட்டை விலை 360 காசாக நிர்ணயம் தமிழகத்தில் முட்டை விலை 360 காசாக நிர்ணயம் ...
தமிழகத்தில் பேப்பர் விலை கிடு கிடு : டன்னுக்கு ரூ.20 ஆயிரம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2013
14:51

சேலம்: தமிழகத்தில், மூலப்பொருட்கள் விலை உயர்வை காரணம் காட்டி, மில்கள், பேப்பர் விலையில், தொடர்ந்து அதிகரிப்பு செய்து வருகின்றன. நடப்பாண்டில், டன்னுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை, உயர்வு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில், பேப்பர் தயாரிப்பில், சேசாயி, டி.என்.பி.எல்., பிலாஸ்பூர், ஜி.வி.ஜி., ஜே.ஜே., அமராவதி, கார்த்திகா' உட்பட, 50க்கும் மேற்பட்ட மில்கள் ஈடுபடுகின்றன. இந்த மில்களில், பேப்பர் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களான, நிலக்கரி, தோல், மரக்கூழ், கெமிக்கல் ஆகியன, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அமெரிக்க டாலருக்கு இணையான, இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு வரும் உயர்வு ஆகியவற்றின் காரணமாக, பேப்பர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால், அனைத்து ரக பேப்பர்களின் விலையிலும், கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த, 2012, டிச., கடைசி வாரத்தில், 'ஏ' கிரேடு பேப்பர்கள், டன், 48 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 2013, ஜனவரியில், 4,000 ரூபாய் உயர்ந்தது. தொடர்ந்து, மாதம் தோறும் விலை உயர்ந்து, தற்போது, 'ஏ' கிரேடு பேப்பர் ஒரு டன், 68 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 'ஏ' கிரேடு பேப்பர், நடப்பாண்டில் மட்டும், டன்னுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை, விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 'பி' கிரேடு பேப்பரும், இதே அளவுக்கு விலை உயர்வை சந்தித்துள்ளது. 2012ல், டன், 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது, தற்போது, 52 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் ஜனவரி முதல், அனைத்து ரக பேப்பர் விலையிலும், டன்னுக்கு, 2,000 ரூபாய் உயர்த்த இருப்பதாக, பேப்பர் மில்கள், வியாபாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளன. பேப்பர்களின் விலை உயர்வு காரணமாக, நோட்டு புத்தகங்கள், நோட்ஸ்கள், வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் பேப்பர்கள், ஜெராக்ஸ் பேப்பர் உட்பட, அனைத்து பொருட்களின் விலையிலும், கடும் உயர்வு ஏற்படும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

சேலம் மாவட்ட பேப்பர் அலாய்டு அசோசியேஷன் உறுப்பினர் ரவி கூறியதாவது: மூலப்பொருட்களின் விலை உயர்வு மட்டுமின்றி, மின் தட்டுப்பாட்டால், பேப்பர் உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் அதிகரித்துள்ளதால், நடப்பாண்டில், 35 முதல் 45 சதவீதம் வரை பேப்பர் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கான நோட்ஸ்களின் விலையில், 60 சதவீதம் வரையில் உயர்வு ஏற்படும். வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தும் நோட்டுகளின் விலை உயர்வு, தவிர்க்க முடியாததாகி விடும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)