பதிவு செய்த நாள்
30 டிச2013
15:53
மும்பை : வரும் பார்லிமென்ட் தேர்தலில், மத்தியில் நிலையான ஆட்சி அமைந்தால் தான் இந்திய பொருளாதாரம் வலுப்பெறும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியின் நிதிநிலை அறிக்கை குறித்த கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது, அமெரிக்கா ஊக்குவிப்பு திட்டத்தை குறைத்தாலும் கவலையில்லை, அதை எதிர்கொள்ள இந்திய தயாராக உள்ளது. கடந்த 6 மாதங்கள் வங்கி தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து இருந்தன. நடப்பாண்டில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மேற்கொண்ட பல நடவடிக்கையால் தங்கம் இறக்குமதி வெகுவாக குறைந்தது, இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் குறைந்துள்ளது. வரும் காலாண்டில் இது 3 சதவீதமாக குறையும்.
வருகிற பார்லிமென்ட் தேர்தலில் மத்தியில் நிலையான ஆட்சி அமையும் வகையில் இந்திய பொருளாதாரம் வலுவடையும். தற்போதைய சூழலில் பொருளாதாரம் வலுப்பெற்று வருகிறது, ஆனால் நாட்டின் வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கிறது. 2014ம் ஆண்டில் வங்கிகளில் பிணையமாக இருக்கும் செயற்படா சொத்துக்கள் 4.6 சதவீதமாக இருக்கும், இதுபடிப்படியாக மார்ச் 2015-ல் 4.4 சதவீதமாக குறையும் என தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|