பதிவு செய்த நாள்
02 ஜன2014
10:37
மும்பை : வாரத்தின் நான்காம் நாளான இன்று(ஜனவரி 2ம் தேதி, வியாழக்கிழமை) இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. வருடத்தின் முதல்நாளான நேற்று இந்திய பங்குசந்தைகள் சரிவை சந்தித்த நிலையில் இன்று, ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றம் மற்றும் முதலீட்டாளர்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட சில பங்குகளை அதிகளவு வாங்க தொடங்கியிருப்பது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் உயர்ந்து இருக்கின்றன.
இன்றைய வர்த்தகநரே துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 48.46 புள்ளிகள் உயர்ந்து 21,188.94-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 6 புள்ளிகள் உயர்ந்து 6,307.65-ஆகவும் இருந்தன.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.63 சதவீதம் உயர்ந்து இருந்தது. ஜாப்பான் பங்குசந்தைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|