பதிவு செய்த நாள்
02 ஜன2014
11:30
திண்டுக்கல்: கர்நாடக அரிசியை தவிர்த்து உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் இட்லி, குருணை உட்பட அனைத்து ரக அரிசியின் விலை கிலோவிற்கு ரூ. 5 வரை குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு லெவி சட்டத்தை அமல்படுத்தியதால் அங்கிருந்து கொள்முதல் செய்யப்படும் பொன்னி ரக அரிசியின் விலை கடந்த வாரம், மூடைக்கு ரூ. 150 அதிகரிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் உற்பத்தியாகும் அரிசி கிலோ ரூ. 30 லிருந்து 40 க்கும், கர்நாடக அரிசி ரகங்கள் ரூ.54 ல் இருந்து 60 வரை விற்கப்பட்டது. பெரும்பாலான கடைகளில் விற்பனை மந்தமாக இருப்பதால் நேற்று முதல் உள்ளூர் அரிசி கிலோவிற்கு ரூ. 5 குறைக்கப்பட்டுள்ளது. இட்லி, குருணை ரக அரிசி விலையும் குறைந்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில்,"மக்களிடம் பண புழக்கம் இல்லாததால் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 20 கிலோ வரை அரிசி வாங்கும் நிரந்தர வாடிக்கையாளர்கள் கூட அதை தவிர்த்து விட்டு, 5 கிலோ குறைவாக வாங்கிச் செல்கின்றனர். விற்பனையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் உள்ளூரில் உற்பத்தியாகும் அனைத்து ரக அரிசியின் விலை ரூ. 5 வரை குறைக்கப்பட்டுள்ளது,” என்றனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|