அதி விரைவு ரயில் திட்டத்தில் அன்னிய முதலீடுஅதி விரைவு ரயில் திட்டத்தில் அன்னிய முதலீடு ... ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.62.41 ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.62.41 ...
நிதி பற்றாக்குறை ரூ.5.09 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2014
15:27

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல், நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், நாட்டின் நிதி பற்றாக்குறை, 5.09 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

பட்ஜெட் இலக்கு

இது, நடப்பு முழு நிதியாண்டிற்கான பட்ஜெட் இலக்கில், 93.9 சதவீதம் என, மத்திய தலைமை கணக்கு ஆணையம் தெரிவித்துள்ளது. நடப்பு, 2013 - 14ம் நிதியாண்டில், நாட்டின் நிதி பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.8 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து இருந்தது. மத்திய அரசின் வருவாயை விட, செலவினங்கள் அதிகரிக்கும் போது ஏற்படும் இடைவெளியே, நிதி பற்றாக்குறையாகும். கணக்கீட்டு காலத்தில், மத்திய அரசின் திட்டமிடப்படாத செலவினங்கள் (வட்டி செலவினம், மானியங்கள்) அதிகரித்ததை அடுத்து, நிதி பற்றாக்குறை உயர்ந்துள்ளது; திட்டச் செலவும் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் எட்டு மாத காலத்தில், அரசின் வரி வருவாய், நிர்ணயிக்கப்பட்ட இலக்கில், 47.9 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, நடப்பு நிதியாண்டின், இதே காலத்தில், 44.8 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.

நிதி பற்றாக்குறை

நடப்பு நிதியாண்டில், நாட்டின் நிதி பற்றாக்குறை, 5.43 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவிற்கு இருக்க வேண்டும் என, அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், முதல் எட்டு மாதங்களிலேயே, நிதி பற்றாக்குறை, 93.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 80 சதவீதம் என்ற அளவில் சற்று குறைந்து காணப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)