ஏறுமுகத்தில் தங்கம் விலை - சவரனுக்கு ரூ.80 அதிகரிப்புஏறுமுகத்தில் தங்கம் விலை - சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு ... தங்கம் விலையில் மாற்றமில்லை தங்கம் விலையில் மாற்றமில்லை ...
பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை - மன்மோகன் சிங் பேட்டி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2014
12:57

புதுடில்லி : கடந்த ஒன்பதரை ஆண்டுகள் பிரதமராக‌ இருந்து வரும் மன்மோகன் சிங், மூன்றாவது முறையாக பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி குறித்து அவர் பேசியதாவது, கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருந்துள்ளது. இந்த காலங்கட்டங்களில் பல்வேறு பொருளாதார சிக்கல்கள் வந்தபோதும் அதை இந்த அரசு சமாளித்துள்ளது. இந்தியாவின் சிறப்பான பொருளாதார கொள்கைகளால் நாடு 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியது. நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக உலக பொருளாதார சூழல் சரியாக இல்லாததால் நாட்டின் வளர்ச்சி சற்று குறைந்துள்ளது. குறிப்பாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. உணவு பொருட்களின் விலை கடுமையாக உயந்ததே பணவீக்கம் உயர காரணமாக அமைந்தது. உணவு பொருட்களின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த இன்னும் நடவடிக்கைகள் தேவை. அதேசமயம் பணவீக்கம் உயர்ந்தாலும் மக்களின் வருமானம் பணவீக்கத்தை விட உயர்ந்துள்ளது.

தற்போது உலக பொருளாதார சூழல் சாதகமாக மாறியுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் நாமும் சரியான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். நாட்டின் வளர்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. நாட்டின் வறுமையை ஒழிக்கவும், வேலைவாய்ப்பை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெரிய தொழிற்சாலைகளில் மட்டும் வேலைவாய்ப்பை அதிகரிக்காமல் சிறு மற்றும் குறுந்தொழில்களிலும் வேலைவாய்ப்பினை அதிகரிக்க வேண்டும். மானிய விலைக்கான சிலிண்டரின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)