பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வுபெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு ... அன்­னிய நேரடி முத­லீடு1,260 கோடி டால­ராக சரிவு அன்­னிய நேரடி முத­லீடு1,260 கோடி டால­ராக சரிவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய பங்கு வெளியீடு: திரட்டப்பட்ட தொகை ரூ.1,619 கோடியாக வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2014
12:32

புதுடில்லி: கடந்த 2013ம் ஆண்டில், புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக நிறுவனங்கள் திரட்டிய தொகை, 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 1,619 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது என, பிரைம் டேட்டாபேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில், ஒட்டு மொத்த அளவில், பங்கு வர்த்தகம் அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்ததுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மந்தமாக இருந்தது. இதனால், புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொள்ள நிறுவனங்கள் தயக்கம் காட்டின என, புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 38 நிறுவனங்கள் 1,619 கோடி ரூபாயை திரட்டி கொண்டன. இதில், ஜஸ்ட் டயல் (919 கோடி ரூபாய்), ரெப்கோ ஹோம் பைனான்ஸ் (270 கோடி) மற்றும் விமார்ட் ரீட்டெயில் (94 கோடி ரூபாய் ஆகிய மூன்று நிறுவனங்களே அதிகளவில் தொகையை திரட்டி கொண்டன.

இவை தவிர, சிறிய மற்றும் நடுத்தர பிரிவில், 35 நிறுவனங்கள், 335 கோடி ரூபாயை, புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக திரட்டி கொண்டன. கடந்த 2012ம் ஆண்டில், 25 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 6,938 கோடி ரூபாயை திரட்டி கொண்டன. இதற்கு முன்பாக, அதாவது, 2001ம் ஆண்டில் தான், நிறுவனங்கள் மிக குறைந்தபட்சமாக, பங்கு வெளியீட்டின் மூலம், 296 கோடி ரூபாயை திரட்டி கொண்டன. அதற்கு பிறகு, சென்ற ஆண்டில் தான், பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்பட்ட தொகை, குறைந்துள்ளது. அதேசமயம், கடந்த 2010ம் ஆண்டில், 64 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டு, 37,535 கோடி ரூபாயை திரட்டி கொண்டன.

இதுகுறித்து, பிரைம் டேட்டாபேஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், பிரணவ் ஹால்டியா கூறியதாவது: சாதகமற்ற அரசியல் சூழ்நிலை, பொருளாதார மந்த நிலை மற்றும் பங்குச் சந்தையில் நிலவிய உறுதியற்ற தன்மை போன்றவற்றால், பல நிறுவனங்கள் மூலதனச் சந்தையிலிருந்து, நிதி திரட்டுவதில் ஆர்வம் காட்டவில்லை, என்றார். இருப்பினும், ஒரு நிறுவனத்தில், பொதுமக்களுடைய பங்கு மூலதனம், 25 சதவீத அளவிற்கு இருக்க வேண்டும் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' புதிய விதிமுறையை அமல்படுத்தியது. இதையடுத்து, பல நிறுவனங்கள், கடந்தாண்டு, பங்கு சந்தை வாயிலாக, கோரிக்கை அடிப்படையிலான பங்கு விற்பனை திட்டத்தின் கீழ், 45,372 கோடி ரூபாயை திரட்டி கொண்டன. இது,இதற்கு முந்தைய ஆண்டில் திரட்டப்பட்ட தொகையை விட, 25 சதவீதம் அதிகம் என, பிரைம் டேட்டாபேஸ் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)