பதிவு செய்த நாள்
05 ஜன2014
04:14
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற, 27ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 21 கோடி டாலர் (1,260 கோடி ரூபாய்) அதிகரித்து, 29 ஆயிரத்து 571 கோடி டாலராக (17.74 லட்சம் கோடி ரூபாய்) வளர்ச்சி கண்டுள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, இதற்கு முந்தைய வாரத்தில், 1.26 கோடி டாலர் சரிவடைந்து, 29 ஆயிரத்து 550 கோடி டாலராக இருந்தது.ஆக, தொடர்ந்து இரண்டு வாரங்களாக சரிவடைந்து வந்த அன்னியச் செலாவணி கையிருப்பு, கணக்கீட்டு வாரத்தில் அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 16.43 கோடி டாலர் உயர்ந்து, 26 ஆயிரத்து 863 கோடி டாலராக அதிகரித்துள்ளது. அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் மாற்றம் எதுவுமின்றி, 2,060 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது. கணக்கீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர்., மற்றும் சர்வதேச நிதியத்தில் நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு முறையே, 446 கோடி டாலர் மற்றும் 201 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான, யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளில் ஏற்பட்ட மாறுபாட்டால், மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி கையிருப்பு வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|