பதிவு செய்த நாள்
07 ஜன2014
15:14
புதுடில்லி: 'மானிய விலையில் வினியோகிக்கப்படும், காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கை, ஒன்பதிலிருந்து 12 ஆக உயர்த்தப்பட மாட்டாது' என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சமையல் காஸ் சிலிண்டர்கள், மானிய விலையில் வழங்கப்படுவதில், மத்திய அரசு, கட்டுப்பாட்டை அமல்படுத்தியது. குடும்பம் ஒன்றுக்கு, ஒன்பது சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. விரைவில், லோக்சபா வரவுள்ள நிலையில், மானிய சிலிண்டர் எண்ணிக்கை, 12 ஆக அதிகரிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து பரிசீலிக்கப்படுவதாக, மத்திய நிதி அமைச்சர், ப.சிதம்பரம் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மறுத்து வந்தார்.
இந்நிலையில், பெட்ரோலியத் துறை செயலர் விவேக் ரே, நிருபர்களிடம் கூறியதாவது: மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டம், பெட்ரோலிய அமைச்சகத்தில் இல்லை. இப்போது உள்ள நடைமுறையில், எவ்வித மாற்றமும் இல்லை. அரசியல் மட்டத்தில் ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி, எனக்கு தெரியாது. இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|