பதிவு செய்த நாள்
07 ஜன2014
15:17
புதுடில்லி: தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்கவும், ஒரு சில கட்டுப்பாடுகளை தளர்த்தவும், மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில், தங்கம் இறக்குமதிக்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, சென்ற ஆண்டில், மூன்று முறை உயர்த்தப்பட்டு, 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த நவம்பர் வரையிலான, 6 மாதங்களில், தங்கம் இறக்குமதி, 90 சதவீதம் குறைந்தது. சென்ற ஆண்டு, மே மாதம், தங்கம் இறக்குமதி, 162 டன்னாக இருந்தது. இது, நவம்பரில், 21 டன்னாக குறைந்துள்ளது. அது போன்று, நடப்பு கணக்கு பற்றாக்குறையும், குறிப்பிடத்தக்க அளவிற்கு சரிவடைந்துள்ளது.
நடப்பு, 2013 - 14ம் நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, முந்தைய மதிப்பீட்டை விட, 2,000 டாலர் குறைந்து, 5,000 கோடி டாலருக்கும் குறைவாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. எந்த நேரத்திலும், வரி குறைப்பு குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என, நிதியமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|