பதிவு செய்த நாள்
08 ஜன2014
10:42
மும்பை : கடந்த ஐந்து நாட்களாக சரிவில் இருந்த இந்திய பங்குசந்தைகள் இன்று(ஜனவரி 8ம் தேதி) உயர்வுடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 79.79 புள்ளிகள் உயர்ந்து 20,773.03-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 22.90 புள்ளிகள் உயர்ந்து 6,185.15-ஆகவும் இருந்தது.
ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் உயர்வு, அதன்வெளிப்பாடாக முதலீட்டாளர்கள் சுகாதாரம், ஆட்டோ மொபைல் மற்றும் நுகர்வோர் தொடர்பான பங்குகளை வாங்க தொடங்கியது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கியுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஜப்பானின் நிக்கி 1.04 சதவீதமும், ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.64 சதவீதமும் உயர்ந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|