பதிவு செய்த நாள்
08 ஜன2014
17:04
மும்பை : 2014-ம் ஆண்டு துவங்கியதில் இருந்தே சரிவுடன் முடிந்து வந்த இந்திய பங்குசந்தைகள் இன்று தனது முதல் ஏற்றத்தை கண்டுள்ளது. இன்றைய வர்த்தகநேரத்தில் 79 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கிய சென்செக்ஸ் இறுதியில் 36 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தது. அமெரிக்க பங்குசந்தையை தொடர்ந்து ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் அதன்வெளிப்பாடாக முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட சில பங்குகளை அதிகளவு வாங்கியது குறிப்பாக சுகாதாரம், ஆட்டோ, உலோகங்கள் மற்றும் எண்ணெய் எரிவாயு தொடர்பான பங்குகளை அதிகளவு வாங்கியதால் இந்திய பங்குசந்தைகள் இன்று ஏற்றத்துடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகநரே முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 36.14 புள்ளிகள் உயர்ந்து 20,729.38-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 12.35 புள்ளிகள் உயர்ந்து 6,174.60-ஆகவும் முடிந்தன.
குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் சிப்லா, டாக்டர் ரெட்டி, சன்பார்மா, கெயில் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|