ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.48 குறைவுஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.48 குறைவு ... மாற்றம் இன்றி முடிந்தது ரூபாயின் மதிப்பு! மாற்றம் இன்றி முடிந்தது ரூபாயின் மதிப்பு! ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தேயிலைக்கு பிட்காய்ன் வாங்கும் ஏற்றுமதியாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2014
00:08

சென்னை:ஏராளமான வியாபாரிகள், கூரியர் மூலம், தேயிலையை வெளிநாடுகளுக்கு அனுப்பி, டாலருக்கு பதிலாக, பிட்காய்ன் பெற்று வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வரி ஏதும் செலுத்தாமல் நடைபெறும், இந்த வியாபாரத்தில், 1.5 கிலோ தேயிலைக்கு, 1,100 டாலர் (66 ஆயிரம் ரூபாய்) மதிப்புள்ள, பிட்காய்ன்கிடைப்பதாக கூறப்படுகிறது.கொழுத்த லாபம் தரும் இத்தொழிலில், சிறிய அளவில் தேயிலை தோட்டம் வைத்துள்ள பண்ணையாளர்களும் ஈடுபடதுவங்கியுள்ளனர். சர்வதேச, கூரியர் நிறுவனம் மூலம், விமானத்தில் அனுப்பும், 4 கிலோ எடையுள்ள, எந்த பொருளும் கட்டாய சோதனைக்கு உட்படுத்தப் படுவதில்லை.
இதை பயன்படுத்தி, சிறிய அளவில் தேயிலை பொட்டலங்களை வெளி நாடுகளுக்கு அனுப்பி, ஏராளமானோர், பிட்காய்ன்பெற்று வருகின்றனர். இடைத் தரகரின்றி, ஏற்றுமதியாளரும், இறக்குமதியாளரும் நேரடியாக வர்த்தகம் புரிவதால், இருதரப்பினரும் பயனடைகின்றனர். பிட்காய்ன் பரிமாற்றத்திற்கென, பிட்பிளே, மேடோவர்காய்ன்ஸ் போன்ற வலைதளங்கள் உள்ளன. இவை, பொருளின் மதிப்பில், ஒரு சதவீதத்தை
பரிமாற்றக் கட்டணமாக வசூலிக்கின்றன.
இதனிடையே, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும், பிட்காய்ன் வாயிலான தேயிலை வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என, எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இணையத்தில் புழங்கும், பிட்காய்ன் கரன்சியை பயன்படுத்த வேண்டாம் என, அண்மையில், ரிசர்வ் வங்கி எச்சரிக்கைவிடுத்தது. இதையடுத்து, பல நிறுவனங்கள், இத்தகைய வர்த்தகத்தை நிறுத்தி உள்ளன.இந்நிலையில், இந்திய நிறுவனமொன்று, 'லஷ்மிகாய்ன்' என்ற இணையதள கரன்சியை அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)