பதிவு செய்த நாள்
13 ஜன2014
10:30
மும்பை : கடந்த சில நாட்களாக மந்தமான நிலையில் இருந்து வந்த இந்திய பங்குசந்தைகள் இன்று(ஜனவரி 13ம் தேதி) வாரத்தின் முதல்நாளில் நல்ல ஏற்றத்துடன் துவங்கியது. இதனால் சென்செக்ஸ் மீண்டும் 21 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. உற்பத்தி தொடர்பான பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவு வாங்க தொடங்கினர். இதனால் இந்திய பங்குசந்தைகள் காலை முதலே நல்ல ஏற்றம் கண்டன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 264.09 புள்ளிகள் உயர்ந்து 21,022.58-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 49.70 புள்ளிகள் உயர்ந்து 6,221.15-ஆகவும் இருந்தன.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தையான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.88 சதவீதம் உயர்ந்து இருந்தது. ஜப்பான் பங்குசந்தைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|