பதிவு செய்த நாள்
14 ஜன2014
05:56
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நடப்பாண்டில் முதன் முறையாக, நேற்று புதிய உச்சத்தை எட்டியது.நடப்பு வாரத்தின் முதல் நாளான நேற்று, துவக்கத்தில் இருந்தே பங்கு வர்த்தகம் களை கட்டியது. அமெரிக்காவில், வேலைவாய்ப்பு எதிர்பார்த்ததை விட குறைவாக வளர்ச்சி கண்டுள்ளதால், அந்நாட்டின் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டில் தொழில் வளர்ச்சி மந்தநிலையில் உள்ளதால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான, 'ரெப்போ' விகிதத்தை உயர்த்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இது போன்ற காரணங்களால், நேற்று பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்கு சந்தைகளிலும், வர்த்தகம் நன்கு இருந்தது.
நேற்றைய வியாபாரத்தில், ஐ.டி., வங்கி, தொலைதொடர்பு உள்ளிட்ட நிறுவனப் பங்குகளுக்கு, அதிக தேவை இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 375.72 புள்ளிகள் அதிகரித்து, 21,134.21 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையி“ன் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 21,169.08 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக. 20,850.54 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டி.சி.எஸ்., ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், எல் அண்டு டி உள்ளிட்ட, 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும், டாட்டா பவர், சன் பார்மா, கெயில் உள்ளிட்ட, 9 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 101.30 புள்ளிகள் உயர்ந்து, 6,272.75 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,288.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,189.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|