பதிவு செய்த நாள்
14 ஜன2014
10:22
மும்பை : கடைசியாக நடந்து முடிந்த இரண்டு நாள் பங்குசந்தைகளில், சென்செக்ஸ் 417 புள்ளிகள் ஏற்றம் கண்ட நிலையில், வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(ஜனவரி 14ம் தேதி) சரிவை சந்தித்து உள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 23.85 புள்ளிகள் சரிந்து 21,110.36-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 3.15 புள்ளிகள் சரிந்து 6,269.60-ஆகவும் சரிந்தது.
கடந்த இருதினங்களில் பங்குசந்தைகள் நல்ல ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் இதை கருத்தில் கொண்டு லாபநோக்கோடு பங்குகளை விற்க தொடங்கினர். இதனால் இந்திய பங்குசந்தைகள் இன்று சரிவை சந்தித்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஜப்பானின் நிக்கி 2.05 சதவீதமும், ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.86 சதவீதமும் சரிந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|