பதிவு செய்த நாள்
14 ஜன2014
11:59
புதுடில்லி : வரும் ஏப்ரல் முதல், குழாய் மூலம் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் சமையல் எரிவாயு விலை அதிகரிக்க உள்ளது. இத்துடன், வாகனங்களில் பயன்படுத்தப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி.,), மின் உற்பத்திக்கான எரிவாயு போன்றவற்றின் விலையும் உயர்த்தப்பட உள்ளது. இதனால், நுகர்வோர், எரிவாயு பயன்பாட்டிற்கு கூடுதலாக செலவிட நேரிடும்.
மத்திய அரசு, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவிற்கான புதிய விலை கொள்கையை, கடந்த 10ம் தேதி வெளியிட்டது. இதன்படி, ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் இயற்கை எரிவாயுவின் விலை, 4.20 டாலரில் இருந்து, 7 8 டாலராக உயர்த்தப்பட உள்ளது. புதிய விலை குறித்த அறிவிப்பு, வரும் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும் என, பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய விலை, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், அமலுக்கு வர உள்ளது. இதை தொடர்ந்து, உள்நாட்டில், இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஆயில் போன்ற நிறுவனங்கள், அவற்றின் எரிவாயு விற்பனை விலையை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கெயில், ரிலையன்ஸ். ஐ.ஜி.எல்., போன்ற நிறுவனங்கள், டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சப்ளை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|