ரூபாய் மதிப்பு மேலும் உயர்வுரூபாய் மதிப்பு மேலும் உயர்வு ... கூட்டுறவு சங்க வட்டி தள்ளுபடியால் ரூ.100 கோடி வசூல் : புதிய கடன்கள் வழங்குவதில் சிக்கல் கூட்டுறவு சங்க வட்டி தள்ளுபடியால் ரூ.100 கோடி வசூல் : புதிய கடன்கள் ... ...
குழாய் வாயிலான சமையல் எரிவாயு விலை உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2014
11:59

புதுடில்லி : வரும் ஏப்ரல் முதல், குழாய் மூலம் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் சமையல் எரிவாயு விலை அதிகரிக்க உள்ளது. இத்துடன், வாகனங்களில் பயன்படுத்தப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி.,), மின் உற்பத்திக்கான எரிவாயு போன்றவற்றின் விலையும் உயர்த்தப்பட உள்ளது. இதனால், நுகர்வோர், எரிவாயு பயன்பாட்டிற்கு கூடுதலாக செலவிட நேரிடும்.

மத்திய அரசு, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவிற்கான புதிய விலை கொள்கையை, கடந்த 10ம் தேதி வெளியிட்டது. இதன்படி, ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் இயற்கை எரிவாயுவின் விலை, 4.20 டாலரில் இருந்து, 7 8 டாலராக உயர்த்தப்பட உள்ளது. புதிய விலை குறித்த அறிவிப்பு, வரும் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும் என, பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய விலை, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், அமலுக்கு வர உள்ளது. இதை தொடர்ந்து, உள்நாட்டில், இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஆயில் போன்ற நிறுவனங்கள், அவற்றின் எரிவாயு விற்பனை விலையை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கெயில், ரிலையன்ஸ். ஐ.ஜி.எல்., போன்ற நிறுவனங்கள், டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சப்ளை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)