குழாய் வாயிலான சமையல் எரிவாயு விலை உயரும்குழாய் வாயிலான சமையல் எரிவாயு விலை உயரும் ... டாஸ்மாக் கடைகளில் டிசம்பரில் ரூ.1,680 கோடிக்கு "சரக்கு' விற்பனை டாஸ்மாக் கடைகளில் டிசம்பரில் ரூ.1,680 கோடிக்கு "சரக்கு' விற்பனை ...
கூட்டுறவு சங்க வட்டி தள்ளுபடியால் ரூ.100 கோடி வசூல் : புதிய கடன்கள் வழங்குவதில் சிக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2014
12:28

கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில், தவணை தவறிய உறுப்பினர்களிடம் இருந்து வட்டி தள்ளுபடி திட்டத்தில், 100 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது. இது, 2012-13 நிதி ஆண்டை காட்டிலும், 250 கோடி ரூபாய் குறைவு.

தமிழகத்தில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில், 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். இவர்களில் ஏராளமானோர், தங்களது கடன் தவணைகளை, உரிய காலத்தில் செலுத்தாமல் விட்டு விடுகின்றனர். இதனால், அவர்கள் கணக்கில், அசல், வட்டி, அபராத வட்டி என்ற வகையில், நிலுவை தொகை உயர்ந்து கொண்டே போகிறது.

சிக்கல்:
இதனால், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள், புதிய கடன் வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. எனவே, நிலுவையில் உள்ள வட்டியை மட்டுமாவது தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, "2012-13ல் நிலுவை தொகையை செலுத்துவோருக்கு வட்டியில் ஒரு பகுதியும், அபராத வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்' என, அரசு அறிவித்தது. இதன்படி, 2012 செப்டம்பர், 30ம் தேதி வரையிலான ஆறு மாதத்துக்கு, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

நீட்டிப்பு:
இத்திட்டத்தை, மேலும் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதை ஏற்று, 2013-14ல் செப்டம்பர், 30ம் தேதி வரை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், இதற்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை என, கூறப்படுகிறது.

இதுகுறித்து, கூட்டுறவு வீட்டுவசதி இணையத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "வட்டி, அபராத வட்டி தள்ளுபடி திட்டத்தில், இந்த முறை, 100.90 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. கடந்த முறை இத்திட்டத்தில், 350 கோடி ரூபாய் வசூலானது. இப்போது குறைவாக வசூலானது குறித்து, ஆய்வு செய்து வருகிறோம்' என்றார்."ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்தில், நிலுவை தொகையை செலுத்தியவர்களின் ஆவணங்கள் முறையாக விடுவிக்கப்படாததே முக்கிய காரணம்' என்று உறுப்பினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

நிலுவையும்; வசூலும்!


* கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில், மொத்தம், 1.12 லட்சம் பேரிடம் இருந்து, 2,084 கோடி ரூபாய் நிலுவை இருந்தது.

* தள்ளுபடி திட்டத்தில், குறைந்த வருவாய் பிரிவினருக்கு, 75 சதவீதம்; நடுத்தர வருவாய் பிரிவினருக்கு, 50 சதவீதம்; உயர் வருவாய் பிரிவினருக்கு, 25 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது. இவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத வட்டியும், தள்ளுபடி செய்யப்படும்.

* 2012 13ல், தள்ளுபடி திட்டத்தில், 34,417 பேரிடம் இருந்து, 350 கோடி ரூபாய் நிலுவை தொகை வசூலானது.

நமது நிருபர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)