கூட்டுறவு சங்க வட்டி தள்ளுபடியால் ரூ.100 கோடி வசூல் : புதிய கடன்கள் வழங்குவதில் சிக்கல்கூட்டுறவு சங்க வட்டி தள்ளுபடியால் ரூ.100 கோடி வசூல் : புதிய கடன்கள் ... ... டாஸ்மாக் கடைகளில் டிசம்பரில் ரூ.1,680 கோடிக்கு "சரக்கு' விற்பனை டாஸ்மாக் கடைகளில் டிசம்பரில் ரூ.1,680 கோடிக்கு "சரக்கு' விற்பனை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஏ.டி.எம்., இழப்பை சரிகட்ட கட்டணம்: எஸ்.பீ.ஐ., முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2014
12:35

மும்பை : "ஏ.டி.எம்., மையங்களின் இழப்பை ஈடு செய்ய, வாடிக்கையாளர்களிடம் பரிவர்த்தனை கட்டணம் வசூலிப்பதை தவிர வேறு வழியில்லை" என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ., ) தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் நிலவரப்படி, எஸ்.பீ.ஐ.,க்கு சொந்தமாக, 32,777 ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. ஒரு சிலவற்றை தவிர, இதர மாநிலங்களில் உள்ள ஏ.டி.எம்., மையங்கள் இழப்பை கண்டு வருகின்றன. வங்கியில் மிகச் சிறிய தொகையை சேமித்து வைத்துள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த கணக்குகளில் இருந்து வங்கிக்கு, எந்தவிதமான வருவாயும் கிடைப்பதில்லை.

இந்நிலையில், இந்த வாடிக்கையாளர்கள், எஸ்.பீ.ஐ., தவிர்த்து, வேறு ஒரு வங்கியின் ஏ.டி.எம்.,ஐ பயன்படுத்தினால், அந்த வங்கிக்கு, எஸ்.பீ.ஐ., ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும், 17 ரூபாய் (வரிகள் உட்பட) செலுத்துகிறது. இந்த கட்டணச் சுமையை எவ்வளவு காலத்திற்கு வங்கியால் தாங்க முடியும்?

ஏ.டி.எம்., மையங்களால் ஏற்படும் இழப்பு கவலை அளிக்கிறது. வங்கிச் சேவை, அதிகளவில் மக்களை சென்றடையும் வகையில், ஏ.டி.எம்.,களை திறக்க, வங்கி தயாராக உள்ளது. ஆனால், அதை எவ்வளவு காலம் நடத்த முடியும். மாதந்தோறும், ஏ.டி.எம்.,களால் ஏற்படும் இழப்பை வங்கியால் தாங்க முடியாது. இதற்கு வர்த்தக ரீதியில் ஆதாயம் தரும் நடைமுறை தேவைப்படுகிறது. எத்தகைய சேவைகளை வழங்கினாலும், அது வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பதே, வங்கியின் நிலைப்பாடு. ஆகவே, இனியும், ஏ.டி.எம்.,களால் ஏற்படும் இழப்பிற்கு வங்கியால், மானியம் அளித்துக் கொண்டிருக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)