பதிவு செய்த நாள்
14 ஜன2014
12:35
மும்பை : "ஏ.டி.எம்., மையங்களின் இழப்பை ஈடு செய்ய, வாடிக்கையாளர்களிடம் பரிவர்த்தனை கட்டணம் வசூலிப்பதை தவிர வேறு வழியில்லை" என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ., ) தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் நிலவரப்படி, எஸ்.பீ.ஐ.,க்கு சொந்தமாக, 32,777 ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. ஒரு சிலவற்றை தவிர, இதர மாநிலங்களில் உள்ள ஏ.டி.எம்., மையங்கள் இழப்பை கண்டு வருகின்றன. வங்கியில் மிகச் சிறிய தொகையை சேமித்து வைத்துள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த கணக்குகளில் இருந்து வங்கிக்கு, எந்தவிதமான வருவாயும் கிடைப்பதில்லை.
இந்நிலையில், இந்த வாடிக்கையாளர்கள், எஸ்.பீ.ஐ., தவிர்த்து, வேறு ஒரு வங்கியின் ஏ.டி.எம்.,ஐ பயன்படுத்தினால், அந்த வங்கிக்கு, எஸ்.பீ.ஐ., ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும், 17 ரூபாய் (வரிகள் உட்பட) செலுத்துகிறது. இந்த கட்டணச் சுமையை எவ்வளவு காலத்திற்கு வங்கியால் தாங்க முடியும்?
ஏ.டி.எம்., மையங்களால் ஏற்படும் இழப்பு கவலை அளிக்கிறது. வங்கிச் சேவை, அதிகளவில் மக்களை சென்றடையும் வகையில், ஏ.டி.எம்.,களை திறக்க, வங்கி தயாராக உள்ளது. ஆனால், அதை எவ்வளவு காலம் நடத்த முடியும். மாதந்தோறும், ஏ.டி.எம்.,களால் ஏற்படும் இழப்பை வங்கியால் தாங்க முடியாது. இதற்கு வர்த்தக ரீதியில் ஆதாயம் தரும் நடைமுறை தேவைப்படுகிறது. எத்தகைய சேவைகளை வழங்கினாலும், அது வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பதே, வங்கியின் நிலைப்பாடு. ஆகவே, இனியும், ஏ.டி.எம்.,களால் ஏற்படும் இழப்பிற்கு வங்கியால், மானியம் அளித்துக் கொண்டிருக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|