கூட்டுறவு சங்க வட்டி தள்ளுபடியால் ரூ.100 கோடி வசூல் : புதிய கடன்கள் வழங்குவதில் சிக்கல்கூட்டுறவு சங்க வட்டி தள்ளுபடியால் ரூ.100 கோடி வசூல் : புதிய கடன்கள் ... ... இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.54 இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.54 ...
டாஸ்மாக் கடைகளில் டிசம்பரில் ரூ.1,680 கோடிக்கு "சரக்கு' விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2014
15:06

கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களால், "டாஸ்மாக்' கடைகளில், டிசம்பர் மாதம், 1,680 கோடி ரூபாய்க்கு, மது வகைகள் விற்பனையானது.

தமிழகத்தில், 6,834 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், தினசரி, சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகின்றன. ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மது வகைகள், கள்ளத்தனமாக, "டாஸ்மாக்' கடைகளை ஒட்டியுள்ள, "பார்'களில் விற்கப்படுவதால், டாஸ்மாக் கடை விற்பனையில் தொடர் சரிவு காணப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம், டாஸ்மாக் கடைகளில், 240 கோடி ரூபாய் மதிப்பிலான, 20 லட்சம் பெட்டி பீர் (2.40 கோடி பாட்டில்) விற்பனையாது. நவம்பரில், 216 கோடி ரூபாய் மதிப்புள்ள, 18 லட்சம் பெட்டி பீர் மட்டுமே விற்பனையானது. இது, கடந்த ஆண்டு, டிசம்பரில், 23 லட்சம் பெட்டிகளாக (276 கோடி ரூபாய்) அதிகரித்திருந்தது. கடந்த டிசம்பரில், மதுபான (ஐ.எம்.எப்.,), விற்பனை, 45 லட்சம் பெட்டிகளாக இருந்தது. இதன் மதிப்பு, 1,440 கோடி ரூபாய்.

ஐ.எம்.எப்., விற்பனை, சென்ற நவம்பரில், 41 லட்சம் பெட்டிகளாகவும், கடந்த ஆண்டு, டிசம்பரில், 48 லட்சம் பெட்டிகளாகவும் இருந்தது. இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சபரிமலை சீசனால், நவம்பரில் குறைந்திருந்த சரக்கு விற்பனை, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களுக்கு முந்தைய தினங்களில் நன்கு இருந்ததால், டிசம்பரில் ஒட்டுமொத்த விற்பனை, நல்ல அளவில் இருந்தது' என்றார்.

இன்று "சரக்கு' விற்பனை இல்லை: அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: "டாஸ்மாக்' கடைகளுக்கு, இன்று, நாளை (15ம் தேதி) மற்றும், 17ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த தினங்களில், அரசு உத்தரவை மீறி, "டாஸ்மாக்' கடை திறப்பது, கள்ளத்தனமாக மது வகைகளை விற்பனை செய்வதை கண்காணிக்க, தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. முறைகேடுகளில் ஈடுபடுவோரை, போலீஸ் உதவியுடன் சிறைக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)