பதிவு செய்த நாள்
14 ஜன2014
15:06
கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களால், "டாஸ்மாக்' கடைகளில், டிசம்பர் மாதம், 1,680 கோடி ரூபாய்க்கு, மது வகைகள் விற்பனையானது.
தமிழகத்தில், 6,834 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், தினசரி, சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகின்றன. ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மது வகைகள், கள்ளத்தனமாக, "டாஸ்மாக்' கடைகளை ஒட்டியுள்ள, "பார்'களில் விற்கப்படுவதால், டாஸ்மாக் கடை விற்பனையில் தொடர் சரிவு காணப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம், டாஸ்மாக் கடைகளில், 240 கோடி ரூபாய் மதிப்பிலான, 20 லட்சம் பெட்டி பீர் (2.40 கோடி பாட்டில்) விற்பனையாது. நவம்பரில், 216 கோடி ரூபாய் மதிப்புள்ள, 18 லட்சம் பெட்டி பீர் மட்டுமே விற்பனையானது. இது, கடந்த ஆண்டு, டிசம்பரில், 23 லட்சம் பெட்டிகளாக (276 கோடி ரூபாய்) அதிகரித்திருந்தது. கடந்த டிசம்பரில், மதுபான (ஐ.எம்.எப்.,), விற்பனை, 45 லட்சம் பெட்டிகளாக இருந்தது. இதன் மதிப்பு, 1,440 கோடி ரூபாய்.
ஐ.எம்.எப்., விற்பனை, சென்ற நவம்பரில், 41 லட்சம் பெட்டிகளாகவும், கடந்த ஆண்டு, டிசம்பரில், 48 லட்சம் பெட்டிகளாகவும் இருந்தது. இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சபரிமலை சீசனால், நவம்பரில் குறைந்திருந்த சரக்கு விற்பனை, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களுக்கு முந்தைய தினங்களில் நன்கு இருந்ததால், டிசம்பரில் ஒட்டுமொத்த விற்பனை, நல்ல அளவில் இருந்தது' என்றார்.
இன்று "சரக்கு' விற்பனை இல்லை: அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: "டாஸ்மாக்' கடைகளுக்கு, இன்று, நாளை (15ம் தேதி) மற்றும், 17ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த தினங்களில், அரசு உத்தரவை மீறி, "டாஸ்மாக்' கடை திறப்பது, கள்ளத்தனமாக மது வகைகளை விற்பனை செய்வதை கண்காணிக்க, தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. முறைகேடுகளில் ஈடுபடுவோரை, போலீஸ் உதவியுடன் சிறைக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|