பதிவு செய்த நாள்
14 ஜன2014
17:43

மும்பை : இந்திய பங்குசந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிந்த நிலையில் இன்று(ஜனவரி 14ம் தேதி) சரிவுடன் முடிந்துள்ளன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் சுணக்கம் மற்றும் லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் சரிவில் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 101.33 புள்ளிகள் சரிந்து 21,032.88-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 30.90 புள்ளிகள் சரிந்து 6,241.85-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் டிசிஎஸ்., ஐசிஐசிஐ., டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட 22 நிறுவன பங்குகளின் விலை சரிந்தும், இன்போசிஸ், எச்டிஎப்சி., சிப்லா உள்ளிட்ட 8 நிறுவன பங்குகள் விலை ஏற்றத்திலும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|