பதிவு செய்த நாள்
16 ஜன2014
10:09
மும்பை : வாரத்தின் நான்காம் நாளில் இந்திய பங்குசந்தைகள் ஏற்றுத்துடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.13 நிலவரப்படி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 53.53 புள்ளிகள் உயர்ந்து 21,343.02-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 17.20 புள்ளிகள் உயர்ந்து 6,338.10-ஆகவும் இருந்தன.
ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றம் மற்றும் நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை வெளியாகி வருவதால், நல்ல லாபம் கண்ட நிறுவனங்களின் பங்குகளை தேர்வு செய்து முதலீட்டாளர்கள் வாங்கி வருவது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றம் காணப்படுகின்றன.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.80 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 0.45 சதவீதமும் உயர்ந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|