பதிவு செய்த நாள்
16 ஜன2014
12:48
டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (டிஎம்எல்)ன் பயணிகள் வாகன வர்த்தக பிரிவு (பிவிபியு), கிராமப்புறங்களில் தன் வியாபாரத்தை பலப்படுத்துவதற்காக, 8 ஜனவரி 2014 அன்று பாண்டியன் கிராம வங்கியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தெற்கு தமிழ்நாடு முழுவதும் 230 கிளைகளை கொண்ட வங்கி சொந்த பயன்பாடு மற்றும் டாக்சி பயன்பாட்டிற்காக டாடா கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நிதியுதவியை வழங்குவதாக சம்மதித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலமாக டாடா கார்களின் விற்பனை கிராமப்புறங்களிலும்அதிகரிக்கும் என்று டாடாபயணிகள் வாகன வர்த்தக பிரிவு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த
ஒப்பந்தம், வங்கியின் மண்டல மேலாளர் மற்றும் மூத்த ஊழியர்கள் முன்னிலையில் விருதுநகர் தலைமை அலுவலகத்தில் வங்கியின் தலைவர் மூலமாக பரிமாறிக் கொள்ளப்பட்டது. பாண்டியன் கிராம வங்கியுடனான ஒப்பந்தத் தை மேலும் வலுப்படுத்த டாடா கார்களை வாங்கும் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|