தங்கம் விலை ரூ.136 உயர்ந்ததுதங்கம் விலை ரூ.136 உயர்ந்தது ... இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.61.62 இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.61.62 ...
மானிய விலை சிலிண்டர் 12-ஆக அதிகரிப்பு!!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2014
14:14

புதுடில்லி: ""மானிய விலையில் அளிக்கப்படும் சமையல், "காஸ்' சிலிண்டர்களின் எண்ணிக்கையை, 12 ஆக அதிகரிக்க வேண்டும்,'' என, காங்., துணை தலைவர் ராகுல் கூறிய, அடுத்த சில மணி நேரத்திலேயே, அவரின் கோரிக்கையை, மத்திய அரசு ஏற்றது. ""இனி, ஆண்டுக்கு, 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும்,'' என, மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு தேவையான சமையல் காஸ் சிலிண்டர்களை, மத்திய அரசு, மானிய விலையில் அளித்து வருகிறது. மானிய விலையில் சிலிண்டர் வழங்குவதால், தங்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுவதாக கூறிய, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், "மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க வேண்டும்' என, தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதையடுத்து, 2012 செப்டம்பரில், மத்திய அரசு, ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி, "இனி, ஆண்டுக்கு, ஆறு சிலிண்டர் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும். இந்த ஆறு சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்படும், வாடிக்கையாளர்கள், சந்தை விலையில், கூடுதல் ரூபாய் கொடுத்து, சிலிண்டரை பெற்றுக் கொள்ளலாம்' என, அறிவிப்பை வெளியிட்டது.இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, கடந்தாண்டு ஜனவரியில், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் எண்ணிக்கையை, ஆறிலிருந்து, ஒன்பதாக அதிகரித்து, மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனாலும், "மானிய விலை சிலிண்டரின் எண்ணிக்கையை, 12 ஆக அதிகரிக்க வேண்டும்' என, பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும், தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.பெட்ரோலிய அமைச்சகம், இதை ஏற்க மறுத்தது.

பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், "நாட்டில் உள்ள, 89 சதவீத வாடிக்கையாளர்கள், ஆண்டுக்கு, ஒன்பது சிலிண்டர்கள் தான் பயன்படுத்துகின்றனர். 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களே, அதைவிட அதிகமாக பயன்படுத்துகின்றனர். எனவே, அவர்களுக்காக, மானிய விலை சிலிண்டரின்எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது' என, திட்டவட்டமாக தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், காங்., கட்சியின் அகில இந்திய பொதுக்குழு நேற்று கூடியது. இதில், காங்., துணை தலைவர் ராகுல் பேசுகையில், ""மானிய விலையில் தற்போது, ஒன்பது சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. இது, பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, சிலிண்டர்களின் எண்ணிக்கையை, 12 ஆக அதிகரிக்க வேண்டும்,'' என்றார்.

ராகுல் பேசிய அடுத்த சில மணி நேரங்களிலேயே, மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி, அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறுகையில், ""ராகுல் யோசனையை ஏற்று, மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை, ஆண்டுக்கு, 12 ஆக அதிகரிக்கப்படும். மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.

தற்போது, சென்னையில், மானிய விலை சிலிண்டர், 401 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த சிலிண்டரின் சந்தை விலை, 1,258 ரூபாய். அரசின் புதிய அறிவிப்பின்படி, இனிமேல், வாடிக்கையாளர்கள், ஆண்டுக்கு, 12 சிலிண்டர்களை, தலா, 401 ரூபாய் விலையில் பெறலாம். இதைவிட, அதிகமான சிலிண்டர் பெற வேண்டுமானால், சிலிண்டர் ஒன்றுக்கு, 857 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும்.லோக்சபா தேர்தல் நெருங்குவதன் காரணமாக, காங்., மேலிடம் இந்த முடிவை எடுத்துள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், அரசுக்கு, ஆண்டுக்கு, 3,300லிருந்து, 5,800 கோடி ரூபாய் வரை, கூடுதலாக செலவாகும்.
* அரசின் இந்த முடிவால், மானிய விலையில் சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களின் சதவீதம், 97 சதவீதமாக அதிகரிக்கும்.
* மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான பிரிவு, ஒப்புதல் அளித்ததும், இந்த திட்டம் அமலுக்கு வரும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)