பதிவு செய்த நாள்
20 ஜன2014
17:10
மும்பை : வாரத்தின் முதல்நாளில் சரிவுடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள், பின்னர் விப்ரோவின் காலாண்டு நிதி நிலை அறிக்கையின் லாபம் உயர்ந்ததால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றம் கண்டன. விப்ரோ மட்டுமின்றி டிசிஎஸ்., இன்போசிஸ் போன்ற ஐடி தொடர்பான பங்குகள் விலையும் உயர்ந்ததால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்தில் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 141.43 புள்ளிகள் உயர்ந்து 21,205.05-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 52.30 புள்ளிகள் உயர்ந்து 6,303.95-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ், பெல், ஆக்சிஸ், எச்டிஎப்சி., ஹீரோ மோட்டோ கார்ப், ஐசிஐசிஐ., ஐடிசி., மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எஸ்பிஐ. உள்ளிட்ட 16 நிறுவன பங்குகள் விலை ஏற்றத்தில் முடிந்தன. ரிலையன்ஸ் உள்ளிட்ட மீதமுள்ள 14 நிறுவன பங்குகள் விலை சரிவில் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|