தங்கம் விலை சிறிது குறைந்ததுதங்கம் விலை சிறிது குறைந்தது ... உயர்வுடன் முடிந்தது ரூபாயின் மதிப்பு - ரூ.61.81 உயர்வுடன் முடிந்தது ரூபாயின் மதிப்பு - ரூ.61.81 ...
ஆப்பிள் ஐ போன் 4 மீண்டும் அறிமுகமாகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2014
16:32

இந்தியாவில் ஐபோன் 4 ஐ (8 ஜிபி) மீண்டும், ஆப்பிள் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. ரூ.15,000 என்று விலையிடப்பட்டு, தவணை முறையிலும், பழைய போன்களை வாங்கிக் கொண்டும் இது விற்பனை செய்யப்படும். இது அறிமுகமான போது ரூ.26,500 என விலையிடப்பட்டது. தற்போது ரூ.11,500 குறைக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் இந்தியாவில் தன் போன்களின் விற்பனைப் பங்கில், கணிசமான இடத்தினை சாம்சங் நிறுவனத்திடம் இழந்துவிட்டதனை அறிந்து, இந்த முடிவினை ஆப்பிள் எடுத்துள்ளது. ஆனால், தற்போதைய விலை கூட, ஆப்பிள் போனை மத்திய அளவில் விலையிடப்பட்டுள்ள ஸ்மார்ட் போன்கள் வரிசையில் கொண்டு வரவில்லை என, மொபைல் போன் விற்பனைச் சந்தையைக் கண்காணித்து வருபவர்கள் கூறுகின்றனர்.

ஆப்பிள், பெரும்பாலும் மத்திய அளவிலான விலையிடப்பட்ட போன் சந்தையில் தன் வாடிக்கையாளர்களை எப்போதும் கொண்டதில்லை. அது குறித்து எந்த விற்பனை தந்திரத்தினையும் மேற்கொண்டதில்லை. இப்போது விலை குறைப்பும் இந்த நிலையை மாற்றவில்லை என்றே பலரும் எண்ணுகின்றனர். இந்தப் பிரிவில், மைக்ரோமேக்ஸ், ஸோலோ மற்றும் லாவா போன்கள் தொடர்ந்து போட்டியிட்டு, கணிசமான இடத்தைப் பிடித்து வருகின்றன.

ஆப்பிள் நிறுவனம், தன் புதிய ஐபோன் 5 வரிசை போன்களை விற்பனைக்கு அனுப்பிய பின்னர், ஐபோன் 4 தயாரிப்பினை முற்றிலுமாக நிறுத்தியது. ஆனால், ஐபோன் 5 விலை மிக மிக அதிகமாக இருந்ததால், ஆப்பிள் போன் விற்பனை மந்தமாகவே தொடர்ந்து இருந்தது. ஐபோன் 4 எஸ் போனை விலை குறைத்து கொடுக்க ஆப்பிள் முன்வரவில்லை. ஏனென்றால், அதன் லாப விகிதம் கணிசமாகக் குறைந்துவிடும். எனவே, விற்பனைக்குச் செல்லாமல் தங்கிய ஐபோன் 4 அனைத்தையும், குறைவான விலையில், நம் நாட்டுச் சந்தையில் தள்ளுகிறது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)