தங்கம் விலை ரூ.32 குறைந்ததுதங்கம் விலை ரூ.32 குறைந்தது ... இந்தியாவின் வளர்ச்சியை 4.4 சதவீதமாக உயர்த்தியது - ஐ.எம்.எப் இந்தியாவின் வளர்ச்சியை 4.4 சதவீதமாக உயர்த்தியது - ஐ.எம்.எப் ...
சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2014
14:38

பி.எஸ்.என்.எல்., தரைவழி போனுக்கான கட்டணம், சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதக் கட்டண ரசீது மூலமே, கட்டண உயர்வு விவரம், வாடிக்கையாளர்களுக்கு தெரிய வந்துள்ளது.

இலவச அழைப்புகள்: பி.எஸ்.என்.எல்., லேண்ட் லைன் போன்களுக்கு, மாதந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இலவச அழைப்புகள் அளிக்கப்பட்டு உள்ளது. இது, பி.எஸ்.என்.எல்., மற்றும் பிற நிறுவன போன்களுக்கு செய்யும் அழைப்புகள் அனைத்துக்கும் பொருந்தும்.இந்த நடைமுறையில், கடந்த ஆண்டு திடீரென, மாற்றம் செய்யப்பட்டது. 'பி.எஸ்.என்.எல்., போன்களுக்கு போன் செய்தால் மட்டுமே, இலவச அழைப்பு சலுகை வழங்கப்படும். வேறு நிறுவனங்களின் போன்களுக்கு, கட்டணம் வசூலிக்கப்படும்' என, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், மாற்றம் செய்தது. பி.எஸ்.என்.எல்., போனில் இருந்து, எந்த நிறுவன போனுக்கு பேசினாலும், 180 வினாடிகள், ஒரு அழைப்பாக கணக்கிடப்பட்டது. தற்போது, வேறு நிறுவன போன்களுக்கு செய்தால், '120 வினாடிகள் ஒரு அழைப்பு' என மாற்றி உள்ளனர்.

அதிருப்தி: இதனால், பி.எஸ்.என்.எல்., லேண்ட் லைன் போனில் இருந்து, பிற நிறுவன போனுக்கு செய் யும் அழைப்பின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னறிவிப்பு இல்லாமல், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் செய்துள்ள, கட்டண உயர்வு, வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர், சடகோபன் கூறியதாவது: இந்த மாதம் வந்த, பி.எஸ்.என்.எல்., கட்டண ரசீது மூலம் தான், கட்டண உயர்வு விவரம் தெரியவந்தது. இது, வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல்., நிறுவனம், அளித்த புத்தாண்டு பரிசு. முன் அறிவிப்பின்றி, அமலுக்கு வரும் இதுபோன்ற கட்டண உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது.பிற போன் நிறுவனங்கள் பல்வேறு கட்டண சலுகையை அளித்து வருகின்றன. ஆனால், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், கட்டண உயர்வை அமல்படுத்துவது, பி.எஸ்.என்.எல்., இணைப்பில் இருந்து வாடிக்கையாளர்களை, வெளியேற்றும் செயலாகவே கருதுகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

இணைப்பு கட்டண சலுகை: ஒரு புறம், சத்தமில்லாமல், போன் கட்டணத்தை உயர்த்தினாலும், இணைப்பு கட்டண சலுகையை பி.எஸ்.என்.எல்., சென்னை நிறுவனம் அளித்துள்ளது. இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:ஓர் ஆண்டு கட்டண திட்டத்தின் கீழ், லேண்ட் லைன் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு, பிராட்பேண்ட் இணைப்புக்கு 250 ரூபாய்; போன் இணைப்புக்கு நகர்புறத்தில், 750 ரூபாய் கிராமப்புறங்களுக்கு, 550 ரூபாய் இணைப்புக் கட்டண சலுகை அளிக்கப்படும். 'கோம்போ' திட்டத்தில், நகர்ப்புற இணைப்புகளுக்கு, 500 ரூபாய்; கிராமப்புறங்களுக்கு, 300 ரூபாய் இணைப்பு கட்டண சலுகை அளிக்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நமது சிறப்பு நிருபர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)