பதிவு செய்த நாள்
23 ஜன2014
17:16
மும்பை : வாரத்தின் நான்காம் நாளில் சரிவுடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் கார்பரேட் நிறுவனங்களின் லாபம் அதிகரித்ததால் அது தொடர்பான பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவு வாங்க தொடங்கியதால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்தில் முடிந்தன.
கடந்த டிசம்பர் 9ம் தேதி சென்செக்ஸ் 21,483.74 புள்ளிகளை தொட்ட நிலையில் அதன்பிறகு நேற்று தான் இந்தாண்டில் சென்செக்ஸ் 21,337.67 எனும் உச்சத்தை தொட்டது. அந்த உச்சம் இன்று மேலும் அதிகரித்தது. இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 21,409.66 வரை சென்றது, இறுதியில் சென்செக்ஸ் 35.99 புள்ளிகள் உயர்ந்து 21,373.66-ஆகவும், நிப்டி 6.70 புள்ளிகள் உயர்ந்து 6,355.60-ஆகவும் முடிந்தன.
நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை ஒவ்வொரு நிறுவனமும் வெளியிட்டு வருகிறது. இன்று முக்கிய நிறுவனமான எல் அண்ட் டி மற்றும் எச்டிஎப்சி ஆகியவை தனது லாபத்தை வெளியிட்டது. இதனால் இந்த பங்குகள் விலை அதிகரித்ததுடன் முதலீட்டாளர்களும் பங்குகளை அதிகளவு வாங்கினர்.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் எல் அண்ட் டி., எச்டிஎப்சி உள்ளிட்ட 14 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், 16 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|