பதிவு செய்த நாள்
24 ஜன2014
10:12
மும்பை : கடந்த இருதினங்களாக சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் இன்று(ஜனவரி 24ம் தேதி) வாரத்தின் கடைசிநாளில் சரிவுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 நிலவரப்படி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 82.20 புள்ளிகள் சரிந்து 21,291.46-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 27.15 புள்ளிகள் சரிந்து 6,318.50-ஆகவும் இருந்தன.
ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் சரிவு மற்றும் கடந்த இருதினங்கள் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில், இதை கருத்தில் கொண்டு லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகளில் சரிவு காணப்படுகின்றன.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.93 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 1.54 சதவீதமும் சரிந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|