பதிவு செய்த நாள்
24 ஜன2014
17:24
மும்பை : கடந்த இருதினங்களாக உச்சத்தில் இருந்த சென்செக்ஸ், வாரத்தின் கடைசி நாளில் பெரும் சரிவை சந்தித்தது. ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட சரிவாலும், ரூபாயின் மதிப்பில் காணப்படும் வீழ்ச்சியாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு அதிகளவு பங்குகளை விற்பனை செய்ததாலும் இந்திய பங்குசந்தைகள் சரிவை சந்தித்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 240.10 புள்ளிகள் சரிந்து 21,133.56-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 78.90 புள்ளிகள் சரிந்து 6,266.75-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஆட்டோ, என்டிபிசி ஆகிய 3 பங்குகளை தவிர மற்ற 27 நிறுவன பங்குகளின் விலை சரிவில் முடிந்தன. குறிப்பாக பெல் நிறுவனத்தின் பங்குகள் 3.39 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 3.26 சதவீதமும், ஐசிஐசிஐ., 1.96 சதவீதமும் சரிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|