பதிவு செய்த நாள்
25 ஜன2014
01:50
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, கடந்த ஒன்பது வாரங்களில் இல்லாத அளவிற்கு, 1.25 சதவீதம் சரிவடைந்தது. நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 61.94ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 75 காசுகள் குறைந்து, 62.69ல் நிலை கொண்டது. வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 0.34 சதவீதம் சரிவடைந்து, 62.14ஆக இருந்தது.
ஜன., 7ம் தேதிக்கு பின், நேற்றைய வர்த்தகத்தின் துவக்கத்தில்தான், இந்த அளவிற்கு, ரூபாய் மதிப்பு சரிவடைந்தது. இந்த சரிவு, வர்த்தகத்தின் இறுதி வரை நீடித்து, கடந்த, 9 வாரங்களில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டது. வட்டி விகித உயர்வு தொடர்ந்து நீடிக்கும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்ததை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்தது. இதன் தாக்கம், அன்னியச் செலாவணி சந்தையிலும் எதிரொலித்தது.நடப்பாண்டில், இதுவரை, அன்னிய நிதி நிறுவனங்கள், 44.34 கோடி டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன. இதே காலத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, ஒரு சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|